குடிக்க தண்ணி இல்ல! சூப்பர் சிங்கரில் கலங்கிய சிறுவன்! கிராமத்தின் பல வருட ஏக்கத்தை தீர்த்த வள்ளல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விஷ்ணு என்ற சிறுவன் தன்னுடைய சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் குருகுளயாப்பட்டி ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த ஊரில் குடிக்க நல்ல தண்ணி இல்லாமல் கஷ்டப்பட்ட மக்களுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக குடிக்க நல்ல தண்ணீர் கிடைத்திருக்கிறது.
விஷ்ணு என்ற ஒரு சின்னஞ்சிறிய பையன், தன் தாய் தந்தைக்கும் தன் கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளான். சூப்பர் சிங்கர் ஜூனியர் பத்தாவது சீசன் பார்ப்பவர்கள் அனைவரும் இந்த சிறுவனை அறிந்திருப்பர்.

விஷ்ணுவும் அவன் வாழும் கிராம மக்களும் குடிதண்ணீருக்கே வழியின்றி தவித்துவந்தனர். விஷ்ணு நன்றாக பாடக்கூடிய பையன். அவன் தன் முயற்சியால் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் முதல்கட்ட ஆடிஷன்களில் தேர்வாகி மேடையேறும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது.
அவன் நிகழ்ச்சியின் முதல் நாளில் "அத்தை மக உண்ண நினைச்சு அழகு கவித எழுதி வெச்சேன்..... அத்தனையும் மறந்துப்புட்டேன் அடியே உன்ன பாத்ததுமே..." என்று மழலைக்குரலில் பாடி அனைவரையும் ரசிக்க வைத்தான். நடுவர்கள் மனோ சித்ரா மற்றும் இசையமைப்பாளர் D. இமான், மகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா அவனுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
ஆனால் அவன் விருப்பம் தன் கிராமத்து மக்கள் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பது. அவன் இந்த நிகழ்ச்சியில் கொடுத்த ஒரு குரல், நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் செவிக்கு எட்டியது.
இந்த விஷயத்தை ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கையில் கையில் எடுத்தார். உடனடியாக அந்த கிராம பஞ்சாயத்து மற்றும் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ஆழ்குழாய் தோண்டி, அந்த ஏழை எளிய மக்களுக்கு குடிதண்ணீர் வசதிக்கு வழிவகுத்துள்ளார். கிராமத்து மக்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று குடிததண்ணீர் எடுத்து வந்த நிலையை மாற்றியுள்ளார். இப்போது அவர்கள் வசிக்கும் கிராமத்திலேயே தண்ணீர் வசதி வந்துள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பேரின்பத்தையும் அளித்துள்ளது.
விஷ்ணு என்ற ஒரு சிறு பையன் தன் கிராமத்தின் துயர் துடைத்துள்ளான் அவன் திறமையும் அவனது சமுதாயம் சார்ந்த இந்த நோக்கமும் இந்த வயதில் ஒரு பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
"ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒரு ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல தண்ணியும் முக்கியம்" என்று அந்த ஊர் மக்கள் ராகவா லாரென்ஸ் மாஸ்டர் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் அனைத்தும் வரும் வாரம் டிசம்பர் 14, 15 சனி மற்றும் ஞாயிறு மலை 6.30 மணிக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டர் பங்குபெறும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பார்த்து மகிழலாம்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications