சர்வைவர் நிகழ்ச்சியில் நடந்தது எல்லாம் பொய்யா??..போட்டோவை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்
சென்னை: சர்வைவர் போட்டியாளர்களின் போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரசிகர்கள் ஒரு பக்கமாக ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் போது இங்கே வேற மாதிரி நடந்து வருகிறது என்று பலர் புலம்பி வருகிறார்கள்.
நிகழ்ச்சி முடிந்து போட்டியாளர்கள் செய்த செயல் தான் தற்போது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோ
ஜீ தமிழில் முதல்முறையாக ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பப்பட்டது. இதுவரைக்கும் இல்லாத வகையில் பிரம்மாண்டமாகவும் அனைவரும் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்தனர். சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார் இந்த செய்தி ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இதைப் பற்றி பரவலாக ரசிகர்களின் மத்தியில் எப்படி இருக்குமோ என்ற ஒரு கோணத்தில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலே பார்ப்பவர்களுக்கு அல்லு விடும் வகையில் டாஸ்க்குகள் அமைந்திருந்தது.

ரசிகர்களின் கோபம்
தண்ணி அதிகமாக சூழ்ந்த கடல் பகுதியில் டாஸ்க் தொடங்கியதால் போட்டியாளர்கள் அனைவரும் வெறித்தனமாக தங்களது திறமையை நிரூபித்து வந்தனர். இரண்டு அணியாக போட்டியாளர்கள் பிரிந்து இருந்தாலும் அதில் ரசிகர்களின் மனதை காடர்கள் அணி அதிகமாகவே கவர்ந்துவிட்டது. தற்போது காடர்கள் அணியிலிருந்து விஜி தான் சர்வைவர் டைட்டிலை வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் பலர் இந்த பட்டம் உமாபதி க்கு வர வேண்டியது என்று கூறிக் கொண்டிருந்தனர்.

கடைசிநேர ட்விஸ்ட்
ஆரம்பத்தில் அன்பாகவும் ஒற்றுமையாக இருந்த காடர்கள் அணியில் கடைசி ஒரு சில எபிசோடுகளில் சண்டை சச்சரவுகள் தொடங்கி ஆளாளுக்கு ஒன்றை பேசி பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து வந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு என்ன இவர்கள் இப்படி மாறிவிட்டார்கள், இதில் யார் சரி என்று யோசிக்கின்ற மாதிரி தான் பல செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் கடைசி நாளில் விஜியின் திடீர் மனமாற்றம் ரசிகர்களை அதிகமாக குழப்பமடைய செய்துவிட்டது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் விஜியின் மீது சக போட்டியாளர்கள் கோபத்தில் இருப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
Recommended Video

சூப்பர் மீட்டிங்
வழக்கமாக ரியாலிட்டி ஷோக்களில் நடப்பது போலத்தான் இங்கேயும் நடைபெற்று இருந்தாலும் சர்வைவர் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு தற்போது காடர்கள் அணியினர் அனைவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர். அவர்கள் அந்த அழகிய தருணத்தை போட்டோக்களாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கின்றனர். இதில் விஜி, விக்ராந்த், இனிகோ, உமாபதி, ஸ்ருஷ்டி டாங்கே, லேடி கேஷ் என பலர் உள்ளனர். அதில் வெனசாவை காணவில்லையே என்று ரசிகர்கள் பீல் பண்ணியும் வருகின்றனர்.
-
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications