Kanmani Serial:மாலைக்குள்ளே தாலியா...? ஒர்கவுட் ஆகலையே
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் கண்ணனுடன் சவுந்தர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போவுது. இருவரும் ஜோடியாக உட்கார்ந்து இருக்க, உறவுக்காரர்கள் நலுங்கு வைக்கிறார்கள்.
சவுந்தர்யா ஆகாஷை விரும்புவதால், கண்ணனுடன் நடக்கும் இந்த கல்யாணம் பிடிக்கலை என்றாலும், பேசாமல் உட்கார்ந்து இருக்கா, கிருஷ்ணவேணி அத்தையின் அக்கா மகன் வேல்முருகன் நலுங்கு வைக்க வருகிறானாம். அப்போது கையில் வைத்து இருக்கும் மாலைக்குள் ஒரு தாலியை ஒளித்து வைத்து இருக்கிறான்.
இந்த ஐடியாவை சவுந்தர்யாவின் அத்தைகள், மாமன்கள் சேர்ந்து செய்து, மாலைக்குள் தாலி வைத்து சவுந்தர்யாவுக்கு போட்டுவிட்டால் சவுந்தர்யா வேல்முருகனுக்குத்தான் என்பது இவர்கள் நினைவு.

சீரியலும் சினிமாதான்
சீரியலும் இன்னொரு சினிமா போலத்தானே...அதனால, ஒரு முறை கழுத்தில் தாலி ஏறிவிட்டால், அம்மன் கோயில் கிழக்காலே படம் மாதிரி தாலியை கழட்ட மாட்டாங்க. அப்புறம் சவுந்தர்யா வேல் முருகனுக்குத்தான்னு முடிவு செய்துக்கறாங்க. வேல்முருகனின் சித்தி, வேல்முருகா நீ போயி சவுந்தர்யாவுக்கு நலுங்கு வைன்னு சொல்லி அனுப்பி வைக்கறாங்க.

ஆசை ஆசையாய் இருக்கிறதே
ஆசை ஆசையாய் இருக்கிறதே என்று பாடல் பாடாத குறையாக வேல்முருகன் தாலி பதுக்கி இருக்கும் மாலையை சவுந்தர்யாவின் கழுத்தில் போட்டுவிட்டு, அத்தை, மாமா என்னை ஆசிர்வாதம்செய்ங்க என்று சவுந்தர்யா அம்மா அப்பாவின் காலில் விழுகிறான்.எதுக்குப்பா நீ காலில் விழறே என்று இவர்கள் இருவரும் கேட்கிறார்கள்.

வில்லன் டயலாக்
அப்போதுதான் வேல்முருகன் வில்லன் டயலாக் பேசறான்...இது வெறும் மாலைன்னு நினைச்சீங்களா? இதில் தாலி சேர்த்து போட்டு இருக்கேன். அதாவது சவுந்தர்யா கழுத்தில் நாந்தான் தாலி கட்டி இருக்கேன். இனி நாங்க புருஷன் பொண்டாட்டி. அதனாலதான் ஆசீர்வாதம் பண்ணுங்கன்னு கேட்டேன்னு சொல்றான்.

அடேய் தாலி இல்லைடா
அதற்குள் மாலைக்குள் தாலி இல்லை என்று அங்கு இருந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்து போக, சதிகாரர்கள் அடேய்.. மாலைக்குள் தாலி இல்லைடா.. பெர்ஃபார்மன்ஸை நிறுத்திக்கோடா என்று கத்தவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் நிக்கறாங்க. ஆமா. இதுக்குள்ள இருந்த தாலி எங்கே போச்சு...பாருங்க தெரியும்...!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications