நடிகர் பிரபுவுக்கு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை.. தற்போது நிலை என்ன? வெளியான பரபரப்பு தகவல்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபுவிற்கு மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்.
நடிகர் பிரபு 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க தொடங்கி இப்ப வரைக்கும் முன்னணி நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாக Zoom வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் கூறியுள்ளதாவது நடிகர் பிரபு கணேசன் தலைவலி காய்ச்சல் மற்றும் தலைவலி அறிகுறி உடன் மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நடு மூளை தமனியில் பிளவு பகுதியில் உள்ள கரோட்டின் தமனியின் மேல் பகுதியில் வீக்கம் அல்லது பலூன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்து பிரபு இப்போது நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் ,மூளை அனீரிசிம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரபு தொடர்ந்து ஓய்வில் இருந்து வருவதாகவும் அவருடைய குடும்பத்தினர் அவரை கவனித்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அவருக்காக பலர் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
நடிகர் சிவாஜி கணேசனின் மகனாக இருந்தாலும் எந்த இடத்திலும் தன்னுடைய தந்தையின் சாயலை பின்பற்றாமல் தனி ஸ்டைலில் சினிமாவில் கலக்கி வருகிறார். தற்போது அவருக்கு 68 வயதாகிறது. ஆரம்பத்தில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததும் நடிகராக அறிமுகமாக வேண்டும் என்று பிரபு முயற்சி செய்திருக்கிறார். அப்போது சிவாஜி கணேசனுக்கு அதில் விருப்பமே இல்லையாம்.
ஆனாலும் மகன் ரொம்ப ஆசைப்படுகிறார் என்பதற்காகத்தான் சினிமாவில் நடிக்க சம்மதம் கொடுத்திருக்கிறார். அப்போது 1982 ஆம் ஆண்டு வெளியான சங்கிலி என்ற படத்தின் மூலமாகத்தான் பிரபு சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வித்தியாசமான கேரக்டரை தேர்வு செய்து நடிக்க தொடங்கியதால் இவர் ஐந்து வருடத்தில் சுமார் ஆறு படங்களில் நடித்திருக்கிறார்.
அதிலும் அதிசய பிறவி, சின்னஞ் சிறுசுகள், கோழி கூவுது போன்ற படங்கள் இவரை பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது. 1993 ஆம் ஆண்டில் சுமார் பத்து படங்களுக்கு மேலாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் படு பயங்கர பிசியான ஹீரோவாக வளர்ந்த பிரபு தான் மட்டும் கதாநாயகனாக நடிக்காமல் தன்னோடு வளர்ந்து வரும் கதாநாயகர்களோடும் சேர்ந்து நடித்து வந்தார். இது இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.
கதாநாயகனாக மட்டுமல்லாமல் இப்போது உள்ள இளம் கதாநாயகர்களுக்கும் அப்பா, அண்ணன், மாமா போன்ற வலுவான வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் கலகலப்பான நடிகராக இருக்கும் பிரபுவிற்கு இப்போது உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவருடைய ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications