Tamil Selvi Serial: படிச்ச பொண்ணுக்கு படிக்காத விவசாயி மாப்பிள்ளையாக முடியாதா? கேள்வி வருதே...!
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியல் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல வியவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்த்தால் கதை வேறு திசையில் பயணிக்கிறது.
தமிழ்ச்செல்விக்கு சரவணன்தான் என்று சிறு வயது முதலே பேசி விடுகிறார்கள். ஆனால், தமிழ்ச்செல்வி நன்றாக படிக்கிறாள். படிப்பில் ஆர்வம் உள்ள தமிழ்ச்செல்வி கல்லூரி படிப்புக்கு பட்டணம் போகிறாள்.
அங்கும் படித்துவிட்டு வந்த நிலையில் கலெக்டருக்கு கல்யாணம் செய்துகிட்டு படிக்கலாம் என்று பாட்டி சொல்ல கல்யாண ஏற்பாடுகளும் நடக்கின்றன.

வெளியூர்ல் அமுதன்
வெளியூருக்கு தமிழ்ச்செல்வி படிக்க போயிருந்த போது ஓரிரு முறை அமுதனை பார்த்து இருக்கிறாள். ரவுடிகள் தமிழ்ச்செல்வியைத் துரத்த அமுதனிடம்தான் அடைக்கலம் கேட்கிறாள் தமிழ்செல்வி.இப்படியாக அமுதனின் மனதில் காதலியாக இடம் பிடித்துவிட்ட தமிழ்ச் செல்வியைத் தேடி கிராமத்துக்கே வந்துடறான் அமுதன்.

சரவணன் அமுதன்
சரவணன் படிக்காதவன்,அவனை கல்யாணம் செய்துகிட்டு மேட்ச் ஆகாதுன்னு அமுதன் தமிழ்ச்செல்விக்கிட்டே சொல்லியும், தமிழ்ச்செல்வி சரவணன் மாமாவைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்றா. இதே எண்ணத்தில் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல், விவசாயம் பார்த்துக்கொண்டு இருந்த சரவணன் மனதில் அமுதன் சித்தி நஞ்சை விதைத்துடறாங்க.

கத்தி கொம்பன்
அவ்வப்போது தமிழ்ச்செல்வியை மிரட்டிக் கொண்டு இருந்த கொம்பன் சரவணனுடன் சண்டையிட, முதலில் கொம்பன் சரவணனை குத்த, சரவணன் கொம்பனைக் குத்தி கொம்பன் இறந்துடறான். அந்த நேரத்தில் கத்திக் குத்து பட்ட சரவணனை ஆஸ்பிடல் அழைச்சுட்டு போகாம, அந்த இடத்திலேயே அமுதனுக்கும், தமிழ்சல்விக்கும் கல்யாணம் நடக்கணும்னு சொல்றான்.இப்பவே நடத்தணும்னும் சொல்றான்.

எல்லாரும் குடும்பத்தில்
குடும்பத்தில் எல்லாரும் சேர்ந்து சரவணன் ஆசைப்பட்டதை செய்து வைக்கறாங்க இப்போது தமிழ்ச்செல்வி கழுத்தில் அமுதன் தாலி கட்டிய பிறகு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடறாங்க. சரவணன் பிழைச்சுக்கறான்.
கடைசியில் ஒரு விவசாயிக்கு படிச்ச பொண்ணை கட்டிக்க தகுதி இல்லையா? இப்படி கேள்வி கேட்க வச்சுட்டீங்களே.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications