அர்ஜுன் பேச்சை கேட்டு நாடகம் போட்ட ராகிணி.. அதிர்ச்சி கொடுத்த தமிழ்.. கோர்ட்டுக்கு வந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 12ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். அதில் தமிழ் மருத்துவமனை கொடுத்திருப்பதை வைத்து அர்ஜுன் தன்மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்குவதற்காக ராகிணியை வைத்து கேம் விளையாட, கடைசியில் கோதை குடும்பம் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராகிணி அர்ஜுனுக்கு போன் போட்டு தன்னுடைய அண்ணன் தனக்காக ஹாஸ்பிடல் வாங்கி கொடுத்திருப்பது பற்றி பெருமையாக சொல்ல அதற்கு அர்ஜுன் இந்த நேரத்தில் எதுக்காக உங்க அண்ணன் உனக்கு ஹாஸ்பிடல் வாங்கி கொடுக்கணும்? அவங்களுக்கு உன் மீது பாசம் இல்ல... நம்ம மேல கேஸ் கொடுத்துட்டு அவங்க ஹாஸ்பிடல் வாங்கி கொடுத்து இருக்காங்க, இதில் ஏதோ நாடகம் இருக்கு என்று ராகிணியின் மனதை மாற்றுகிறார்.

அதற்கு ராகிணி இல்லை எங்க அண்ணன் என் மேல பாசமாகத்தான் ஹாஸ்பிடல் வாங்கி கொடுத்து இருக்கிறார் என்று சொல்ல, அதற்கு அர்ஜுன் உன் மீது உண்மையான பாசம் இருந்தால் உங்க குடும்பத்தினர் கொடுத்த கம்ப்ளைன்டை வாபஸ் வாங்க சொல்லு பாப்போம் என்று ஏத்தி விட அதற்கு ராகினி என்னுடைய அண்ணனுக்கு என் மேல பாசம் இருக்கு. அதனால எனக்காக அவர் எதுவும் செய்வாரு. நான் அவரிடம் பேசுகிறேன் என்று சொல்லி தமிழ் வீட்டிற்கு போகிறார்.
அந்த நேரத்தில் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராகிணியை கண்டதும் எல்லோரும் நல்லபடியாக வரவேற்கின்றனர். பிறகு ராகிணி அர்ஜுன் மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதற்காக சொல்ல அதற்கு கார்த்தி மற்றும் நடேசன் அது எங்களால் முடியாது. அந்த அர்ஜுன் எங்களை ஏமாற்றி சொத்தை வாங்கி இருக்கிறார். அவர்களிடமிருந்து நாங்கள் அந்த சொத்தை திரும்ப பெறுவோம் என்று சொல்ல, அதனால் ராகிணி ஏமாற்றம் அடைந்து தமிழிடமும் அண்ணா எனக்காக நீங்க கேஸை வாபஸ் வாங்க மாட்டீங்களா?

உங்களை எல்லாரும் தப்பா பேசுறாங்க என்று ஃபீல் பண்ணி பேச அதற்கு தமிழ் நான் இந்த முடிவில் மட்டும் பின்வாங்க மாட்டேன். அப்பா அம்மா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்துக்களை அவன் ஏமாற்றி எங்களிடமிருந்து வாங்கிட்டான். அதனால இந்த கேஸை வாபஸ் வாங்க மாட்டோம் என்று சொல்லிவிட ஏமாற்றம் அடைந்து ராகிணி வீட்டிற்கு போகிறார்.
அங்கு அர்ஜுனுடைய குடும்பத்தினர் எல்லோரும் ராகிணி என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அப்போது ராகிணி தமிழ் வீட்டில் நடந்ததை சொன்னது கேட்டு எல்லோரும் ஏமாற்றம் அடைகின்றனர். அதோடு அடுத்த நாள் கோர்ட்டுக்கு போகணும் என்று அர்ஜுன் குடும்பத்தினர் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் கோர்ட் வாசலில் தமிழ் குடும்பத்தினர் எல்லோரும் வக்கீல் இடம் இந்த கேஸ் நமக்கு சாதகமாக முடியுமா? என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ராகிணி நான் உங்களிடம் எவ்வளவோ கேட்ட பிறகும் நீங்கள் இந்த கேஸ் வாபஸ் வாங்க மாட்டேன் என்று சொல்லி என்னை கோர்ட்டுக்கு இழுத்துட்டீங்கல்ல என்று கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications