இம்புட்டுத்தாங்க சீரியல்.. இதுக்கா இப்படி?!
சென்னை: தொலைகாட்சி சீரியல்களை ஒரு மாசம் பார்க்க தவறி விட்டாலும் ஒரு நாள்பார்த்தால் கதை புரிஞ்சுரும். சும்மா தங்களுக்கு பிடிச்ச நடிகர் நடிகைகளை பார்க்க முடியலைன்னு வேணும்னா படபடன்னு இருக்கலாம்.
கதை புரியாது என்று கவலைப்படத் தேவையில்லை. ஆனாலும் சீரியல் நேரங்களில் மக்கள் டிவி முன் உட்கார்ந்துவிட வேண்டும். இல்லை அதிக ஒலி வச்சுட்டு காதில் கேட்டபடியாவது வேலை செய்ய வேண்டும்.
மக்கள் இப்படி இருக்கும் வரை மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால்தான் சன் டிவி காலையில் ஆரம்பித்து இரவு 11 மணி வரை சீரியலை ஒளிபரப்பி வருகிறது.
குழப்பம் குடும்பத்தில்
ஒவ்வொரு சீரியலிலும் ஒரு சில காட்சிகளாவது குடும்பத்தில் யாராவது ஒருவரால் குழப்பம் ஏற்படும்...இல்லை இரண்டு பெண்கள் சேர்ந்து யாரையாவது பழிவாங்கத திட்டமிடுவார்கள். இப்படி திட்டமிடுவதை ஒருவர் ஒட்டு கேட்பார்கள்.
Sembaruthi serial: மித்ரா நான் பார்த்து வச்ச மருமகள்.. பார்வதி நீ பேசாதே!
காவல் நிலையம்
போலீஸ் ஸ்டேஷனில் போலீசிடம் புகார் அளிப்பது, இல்லை ஜெயில் தண்டனை பெற்று அங்கு சிலரால் முக்கிய கதாபாத்திரம் துன்புறுத்தப் படுவது.. பொய் வழக்குகள்.. போலீஸ் பணம் வாங்கிகிட்டு பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பது இப்படி சில காட்சிகள் இருக்கும்.
ஆஃபீஸ் செட்டப்
ஸ்ட்ரிக்ட் ஆஃ பீசர்னு காண்பிக்க ஆஃபீஸ் செட்டப் காட்சிகள் இருக்கும். காதலர்கள் சும்மாவேனும் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று சம்பந்தமே இல்லாமல் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இப்படி கண்டிப்பாக இருக்கும். இதுக்கு நடுவில் எதிரி ஆட்டோ, அல்லது காரில் போகிறார்கள் என்றால் அவர்களை பின் தொடரும் காட்சிகள் இருக்கும்.
கொஞ்சம் கதையோடு
இவைகளுக்கு நடுவில் கொஞ்சம் கதையோடு பயணித்தீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் சீரியல் ஹிட். இந்த காட்சிகள் இல்லாமல் எதாவது சீரியல் பார்த்தீர்கள் என்றால் அது உங்களுக்கு யோகம்தான்.ஆனால், இம்புட்டுதாங்க தொலைக்காட்சி சீரியல்கள்.