தூத்துக்குடியில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவி.. பிக் பாஸ் முத்துக்குமரன் ஆதங்க கேள்வி
சென்னை: தூத்துக்குடி அருகே +2 படித்து வந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததிலிருந்து பொதுமக்கள் மத்தியில் சோகமும் கோபமும் ஒரே நேரத்தில் கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனங்களும் விவாதங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் உரிமை அமைப்புகள் உள்ளிட்ட பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை விரைவாக கைது செய்து சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

தூத்துக்குடி மாணவி கொலை
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த +2 படித்து வந்த மாணவி ஒருவர் காலைக்கடன் கழிப்பதற்காக தன் வீட்டில் அருகில் இருந்த முட் புதர்களுக்கு போனதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களது நேரமாக திரும்பி வராததால் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பின்னர் அந்த மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் வெளியாகியதும் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பாலியல் வன்கொடுமையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்ததால் மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சி நிலவியது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
"இப்படி நடக்கும் சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெறும்" என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் பிரபல முத்துக்குமரன் கடும் எதிர்ப்பு
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தவர்களில் ஒருவராக முத்துக்குமரன் இருக்கிறார். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அறிமுகமான அவர், தனது சமூக வலைதளப் பதிவில் இந்த சம்பவம் குறித்து கடும் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில் மிகவும் கோபத்துடன் கூறியதாவது:"தமிழ்நாடு அரசு என்ன பண்ணுறீங்க? இப்படி ஒரு கொடூரம் நடந்த பிறகும் சட்டம் மட்டும் போதாது. யாராவது பாலியல் கொடுமை செய்தால் அவர்களை ஊர் மத்தியில் நிற்கவிட்டு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வாழ்நாள் சிறையில் போடுவது மட்டும் போதாது. இனிமேல் யாருக்கும் இப்படிச் செய்ய நினைக்க கூட பயமாக இருக்க வேண்டும்," என்று தனது வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
வைரலான பதிவு
முத்துக்குமரன் வெளியிட்ட இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். "குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்" என்ற கருத்து பலரிடமும் ஒத்துப்போவதாக பதிவுகள் வெளியாகி வருகின்றன.
அதே நேரத்தில் சிலர் சட்டம் தனது வழியில் செயல்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் தப்பிக்க முடியாத வகையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் எழுந்த கேள்விகள்
தூத்துக்குடியில் நடந்த இந்த சம்பவம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பாதுகாப்பாக இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள், விரைவான விசாரணை மற்றும் தண்டனை ஆகியவை அவசியம் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து கண்காணிக்கும் மக்கள்
இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது. போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டாலும், மக்கள் மத்தியில் இன்னும் பதட்டமும் எதிர்பார்ப்பும் நீடித்து வருகிறது.
தூத்துக்குடியில் நடந்த இந்த சம்பவம் தமிழக மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே தற்போது பலரின் ஒருமித்த கோரிக்கையாக மாறியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications