TCDC: டாப் குக்கு டூப் குக்குவில் சைலண்டாக டைட்டில் வென்ற வில்லன் நடிகர், இரண்டாவது இடம் இவருக்கா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வெற்றியாளர்கள் பற்றிய தகவலை தான் இந்த செய்தியில் விரிவாக பார்க்க போகிறோம். இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பெரிய எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை யார் பெற்றார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேஷன்ஸ் நிறுவனம் அங்கிருந்து வெளியே வந்து கடந்த வருஷம் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தயாரித்தது. இது பலருக்கும் தெரிந்தது. அதுதான் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் விஜய் டிவியை விட்டு வெளியே வந்த போது அந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆறு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்டும் அங்கிருந்து வெளியே வந்து விட்டார். அது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

வெங்கடேஷ் பட் வெளியே வந்ததை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த சிலரும் அங்கிருந்து வெளியே வந்து விட்டார்கள். செஃப் தாமு முதலில் வருவதாக சொல்லி இருந்தார். பிறகு தான் வரவில்லை என்று போட்ட போஸ்ட்டை டெலிட் செய்து விட்டார். இப்போதும் அவர் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் இருக்கிறார்.
வெங்கடேஷ் பட் நடுவராக தொடங்கிய டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது சீசன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பாக தொடங்கியது. அதில் நடிகைகளாக கிரண், ஷிவானி நாராயணன், டெல்னா டேவிஸ், பிரியங்கா மற்றும் நடிகர்கள் பெசன்ட் ரவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட ஒரு சிலர் குக்குகளாகவும் கமலேஷ், மோனிஷா பிளசி, ஜிபி முத்து உள்ளிட்ட சிலர் டூப் குக்குகள் ஆகவும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த ரோபோ சங்கர் ஒரு சில வாரங்களில் எவிக்ஷனான அடுத்த சில நாட்களிலேயே காலமானார். அது அந்த நேரத்தில் பலரையும் வருத்தமடைய செய்தது. தான் வெளியே போகும்போது கூட மிகவும் பாசிட்டிவாக பேசி விட்டு போயிருந்தார். தான் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வருவேன் என்று சொல்லி இருந்தார். பிறகு ஒவ்வொருவராக வெளியேற ஃபைனல் ஸ்டேஜ் வந்திருக்கிறது.

இதில் இறுதி எபிசோடுக்கான சூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதிலிருந்து சில தகவல்கள் கசிந்து இருக்கின்றன. அதன்படி நடுவர்களின் பாராட்டை வாங்கிய நடிகர் பெசன்ட் ரவி டைட்டில் வின்னராக செலக்ட் ஆகி இருக்கிறாராம். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடம் பிரித்தாவிற்கு கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே நடிகர் ரவி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சென்னையில் ஒரு ஹோட்டலையும் நடத்தி வருகிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தன்னுடைய ஸ்பெஷலான சாப்பாட்டை செய்து காட்டி அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டு இருந்தார். இப்போது அவர் பைனலில் அசத்தியதாக தெரிகிறது. இந்த எபிசோடு இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications