TCDC: டாப் குக்கு டூப் குக்குவில் சைலண்டாக டைட்டில் வென்ற வில்லன் நடிகர், இரண்டாவது இடம் இவருக்கா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வெற்றியாளர்கள் பற்றிய தகவலை தான் இந்த செய்தியில் விரிவாக பார்க்க போகிறோம். இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பெரிய எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை யார் பெற்றார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேஷன்ஸ் நிறுவனம் அங்கிருந்து வெளியே வந்து கடந்த வருஷம் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தயாரித்தது. இது பலருக்கும் தெரிந்தது. அதுதான் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் விஜய் டிவியை விட்டு வெளியே வந்த போது அந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆறு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்டும் அங்கிருந்து வெளியே வந்து விட்டார். அது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

வெங்கடேஷ் பட் வெளியே வந்ததை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த சிலரும் அங்கிருந்து வெளியே வந்து விட்டார்கள். செஃப் தாமு முதலில் வருவதாக சொல்லி இருந்தார். பிறகு தான் வரவில்லை என்று போட்ட போஸ்ட்டை டெலிட் செய்து விட்டார். இப்போதும் அவர் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் இருக்கிறார்.
வெங்கடேஷ் பட் நடுவராக தொடங்கிய டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது சீசன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பாக தொடங்கியது. அதில் நடிகைகளாக கிரண், ஷிவானி நாராயணன், டெல்னா டேவிஸ், பிரியங்கா மற்றும் நடிகர்கள் பெசன்ட் ரவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட ஒரு சிலர் குக்குகளாகவும் கமலேஷ், மோனிஷா பிளசி, ஜிபி முத்து உள்ளிட்ட சிலர் டூப் குக்குகள் ஆகவும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த ரோபோ சங்கர் ஒரு சில வாரங்களில் எவிக்ஷனான அடுத்த சில நாட்களிலேயே காலமானார். அது அந்த நேரத்தில் பலரையும் வருத்தமடைய செய்தது. தான் வெளியே போகும்போது கூட மிகவும் பாசிட்டிவாக பேசி விட்டு போயிருந்தார். தான் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வருவேன் என்று சொல்லி இருந்தார். பிறகு ஒவ்வொருவராக வெளியேற ஃபைனல் ஸ்டேஜ் வந்திருக்கிறது.

இதில் இறுதி எபிசோடுக்கான சூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதிலிருந்து சில தகவல்கள் கசிந்து இருக்கின்றன. அதன்படி நடுவர்களின் பாராட்டை வாங்கிய நடிகர் பெசன்ட் ரவி டைட்டில் வின்னராக செலக்ட் ஆகி இருக்கிறாராம். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடம் பிரித்தாவிற்கு கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே நடிகர் ரவி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சென்னையில் ஒரு ஹோட்டலையும் நடத்தி வருகிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தன்னுடைய ஸ்பெஷலான சாப்பாட்டை செய்து காட்டி அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டு இருந்தார். இப்போது அவர் பைனலில் அசத்தியதாக தெரிகிறது. இந்த எபிசோடு இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications