ஜாலியாக டாப் ஹீரோவுடன் "கால் அழகி" நடிகை டூர்.. வயதாகியும் திருமணம் செய்ய முடியாத பரிதாபம்: பிரபலம்
சென்னை: இந்திய சினிமாவை பொறுத்தவரை, திருமணமாகாமல் சில நடிகைகள் இன்னமும் உள்ளனர்.. மூத்த நடிகைகளுக்கும் திருமணம் செய்யாமல் இருக்க காரணங்கள் உண்டு.. சில நடிகைகள் 40 வயதுக்கு பிறகு திருமணமே வேண்டாம் என்ற மனநிலைமைக்கும் ஆளாகிவிடுகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "சினிமாவில் ஆண்களுக்கு ஒரு சட்டம், பெண்களுக்கு ஒரு சட்டம் உள்ளது.. ஆண்கள் திருமணமாகி பிள்ளைகள் பெற்றிருந்தாலும்கூட, சிறுவயது நடிகைகளுடன் ஜோடியாக நடிப்பார்கள்.. ஆனால், ஹீரோயின்களுக்கு இது சாத்தியமில்லை.. கல்யாணமாகி விட்டால், அக்கா, அம்மா கேரக்டர்தான் தரப்படும்..

நயன்தாரா விதிவிலக்கு
நயன்தாரா போன்றோர் விதிவிலக்கு உண்டு. நயன்தாரா என்றாலும், எந்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். எப்படி பார்த்தாலும் நயன்தாராவுக்கு திருமணத்துக்கு பிறகு சரிவுதான்.. சின்ன நடிகர்களுடன் ஜோடி போடவும் முடியாது. எனினும் நயன்தாரா போல மற்ற நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை..
இந்திய அளவில் திருமணமாகாமல் பல மூத்த நடிகைகள் இருக்கிறார்கள்.. திருமணம் செய்துவிட்டால் மார்க்கெட் போய்விடுமோ என்ற கலக்கம்தான்.. சில சமயம், லீக் செய்யப்பட்ட நடிகைகளின் வீடியோக்கள் இணையதளத்தில் அடிக்கடி பரவும்.. இதை திட்டமிட்டே சில நடிகைகள் பரப்புவார்கள். இதன்மூலமும் சம்பந்தப்பட்ட நடிகைக்கு பட வாய்ப்புகள் வரலாம்..
பிளே பாய் கேரக்டர்
30 வயதாகிவிட்டால், யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்களோ, அதே ஹீரோவுக்கு அம்மாவாக நடிப்பார்கள்.. அந்த நடிகர்களுக்கும் மனசாட்சியே இருக்காது. அதற்காக ரஜினி, கமல், விஜய் என எல்லாருமே ப்ளே பாய் கேரக்டரில் இப்போது நடிக்க முடியாது.. இவர்கள் வயதான கெட்டப்பில் நடித்தாலும், ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு வெள்ளை முடி ஒன்றுகூட இருப்பதில்லை.
உதாரணத்துக்கு "லியோ" படத்தில் 20 வயது மகனுக்கு அம்மாவாக திரிஷா நடித்தாலும், தலையில் ஒரு வெள்ளை முடியும் இருக்காது. அவரது தோற்றமும் 20 வயதுக்கு அம்மாவாகவும் இருக்க மாட்டார்..
முன்னணி மற்றும் சீனியர் நடிகர்களுடன் நடிப்பதற்காகவே, சில நடிகைகள் திருமணத்தை செய்யாமல் உள்ளனர்.. இதனால் மற்றொரு சிக்கல் என்னவென்றால், இந்த முன்னணி மற்றும் சீனியர் நடிகைகளுக்காகவே, வேறு சின்ன ஹீரோக்களுடனும் சேர்ந்து நடிக்க முடியாமல் போகிறது..
பரிதாப நடிகைகள்
தங்களுடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு திருமணமாகியிருக்க கூடாது, அட்ஜஸ்ட்மென்ட் உள்ளிட்ட விஷயங்களில், சில சீனியர் நடிகர்களே கறாராக இருப்பதால், சில நடிகைகள் திருமணமே இன்னும் செய்யாமல் உள்ளனர்" என்று தனிப்பட்ட முறையில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த சபிதா ஜோசப், "தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படவுலகில் பெரிய ஹீரோக்கள் படங்களில் தொடர்ந்து குறிப்பிட்ட நடிகைகளே ஒன்றாக சேர்ந்து நடிப்பார்கள். அந்த ஜோடி ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால், சிலசமயம் 20 படங்கள் கூட ஜோடி சேர்ந்து நடிப்பார்கள்... இதனால் படங்களும் வெற்றி பெறும்.
கால் அழகி யார்
பிறகு சம்பந்தப்பட்ட நடிகர்களின் வேறு மொழி நண்பர்களும், அதே நடிகையுடன் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.. அதாவது ஏற்கனவே நடிகை பிரபலமாகியிருப்பதால், படத்துக்கும், அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கும்கூட பயன்படுத்துவார்கள்.
தெலுங்கில் இப்படித்தான் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார், "கால் அழகி" என்று சொல்லப்படும் நடிகையுடன் 16 நாள் அவுட்டோர் சென்று, ஜாலியாக இருந்து விட்டு வந்தார்.. அதே நடிகர் இன்னொரு நடிகையையும் அழைத்து சென்றது, 90களில் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது" என்றெல்லாம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications