Eeramana Rojaave Serial: சமைச்சு கொண்டு வந்தவ ஊட்டிவிட மாட்டேனா மாமா?
Recommended Video
சென்னை: இவ்ளோ தூரம் வயக்காட்டு வரைக்கும் சமைச்சு கொண்டு வந்தவ ஊட்டிவிட மாட்டேனா மாமா? ஊட்டிவிடறேன்...ஆ காட்டுங்க மாமா என்று பொண்டாட்டி மலர் ஆசையாக கேட்கிறாள். புருஷன் வெற்றி மனம் நெகிழ்ந்து அமர்ந்து இருக்க, அவன் கண்களில் கண்ணீர் குளமாக நிற்கிறது.
எத்தனை பேருக்கு வாய்க்கும் இது போல பொண்டாட்டி, அதுவும் நொடிக்கு ஒருதரம் மாமா மாமா என்று சொல்லி, புருஷனை காதலிக்கும் பொண்டாட்டி. புருஷன் பொண்டாட்டின்னா இப்படி இருக்கணும் என்று ஆசைப்படும் அளவுக்கு நின்றால் , நடந்தால் என்று லவ்வையே சொல்லும் ஒரு சீரியல்தான் விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல். .
மலர் வெற்றி இருவரும் தங்கள் காதலை பரிமாறிக்கொள்ள விடிய விடிய பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தூக்கம் வருதுன்னு ரெண்டு பேருமே சொல்லாமல் பேசிக்கொண்டு இருக்க மலர் அவன் மார்பில் சாய்ந்து தூங்கிவிடுகிறாள். இதை பார்க்கும் மகா ஜனங்களும் தங்களுக்கு சலிக்கவில்லை என்று ரசிக்கிறார்கள்.

தம்பியுடன் கல்யாணம்
மலர் வெற்றியின் அண்ணனை காதலிக்கிறாள். கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு ஒரு விபத்தில் மாப்பிள்ளை இறந்துவிட, தம்பி வெற்றியுடன் மலருக்கு கல்யாணம் நடக்கிறது. அந்தக் காதலை மறந்து இந்த கல்யாணத்தை எப்படி மலர் ஏற்றுக்கொள்கிறாள் என்பதுதான் கதை. இதைத்தான் ஒரு நீண்ட கதையாக இழுத்து சொல்லி இருக்கிறார்கள்.

மலர் மாமா
ஒரு ஜவுளிக்கடையில் துணி எடுக்க, அந்த குலுக்களில் புருஷன் பொண்டாட்டி ரெசார்ட்டில் ஓய்வெடுத்து என்ஜாய் பண்ணலாம் என்று அழைப்பு விடுகிறார்கள். அதில் இருவருக்கும் கொஞ்சம் நெருக்கமாகுது. அப்போதுதான் என்னை நீ எப்படி கூப்பிட ஆசைப்படறே மலர்னு வெற்றி கேட்கிறான். நீங்களே சொல்லுங்க என்று இவள் சொல்ல, இல்லை நீதான் சொல்லணும் என்று இவன் சொல்ல.. அப்போதுதான் புருஷனை மாமா என்று கூப்பிடணும்னு ஆசைப்படுவதாக சொல்கிறாள் மலர்.

மாமா ரிங் டோன்
அன்றிலிருந்து வெற்றியின் போன் நம்பர் மலரின் போனில் மாமா என்று சேவ் செய்யப்பட்டு, அதற்கு தனி ரிங் டோன் வைக்கும் அளவுக்கு நெருக்கம் வந்துருது. போன் அடிச்சாலே சொல்லுங்க மாமா சொல்லுங்க மாமான்னு ஒரே மாமா ட்ரீட்டுத்தான். பிறந்த நாளைக்கு வாழ்த்து சொல்லுவான் என்று எதிர்பார்த்து ஒவ்வொரு முறை அவன் போன் அடிக்கும்போதும், ம்ம் சொல்லுங்க மாமா என்று ஆசையா கேட்பது. பின்னர் அவன் வாழ்த்து சொல்லவில்லை என்று சப்பென்றாகிவிடுவது என்று அன்றைக்கு மட்டும் குறைந்தது 25 முறை மாமா என்று அழைத்து இருப்பாள்.

ஆ காட்டுங்க மாமா
வயல்காட்டில் வெற்றி வேலை செய்து கொண்டு இருக்க, கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு.. பின்னால நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு என்பது போல சாப்பாட்டை எடுத்து வருகிறாள் மலர். இவன் கையை கழுவிட்டு வரேன்னு சொல்ல, என்ன மாமா இவ்ளோ தூரம் சாப்பாடு எடுத்துட்டு வந்தவளுக்கு ஊட்டிவிடத் தெரியாதா? ஆ காட்டுங்க மாமா என்று மலர் ஊட்டிவிடுகிறாள். வெற்றியின் கண்களில் குளம் மாதிரி கண்ணீர்.
இதுதாங்க ஈரமான ரோஜாவே மலர் வெற்றியின் காதல் கதை!
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications