Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காரில் பாக்யராஜுடன் ஹனிமூனா? ஜாடை மாடையாக பேசிய தயாரிப்பாளர்.. நாற்காலியை தூக்கி வீசிய வடிவுக்கரசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னி பருவத்திலே படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் ராஜ்கண்ணு ஜாடை மாடையாக தவறாக பேச அப்போது கோபமடைந்த வடிவுக்கரசி நாற்காலியை தூக்கி வீசிய சம்பவத்தை அவரே பிளாஷ்பேக்காக கூறியுள்ளார்.

கன்னி பருவத்திலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வடிவுக்கரசி. இந்த படத்தில் ராஜேஷ், பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை தயாரித்தவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. இதை இயக்கியவர் பி.ஏ.பாலகுரு.

Vadivukkarasi recalls a incident in Kanni Paruvathile set

இந்த படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற பட்டு வண்ண ரோசாவாம் பாடல் மிகவும் பிரபலம். கண்ணம்மா எனும் கேரக்டரில் வடிவுக்கரசி அற்புதமாக தனது நடிப்பை காட்டியிருப்பார். வடிவுக்கரசி சென்னையை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 61 வயதாகிறது. எனினும் இவர் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் இதுவரை 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொடக்க காலங்களில் கதாநாயகியாக நடித்தாலும் இவர் பின்னாளில் முன்னணி நடிகர்களுக்கு தாய், சகோதரி கேரக்டர்களில் நடித்திருந்தார். இவர் சில படங்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். முதல் மரியாதை படத்தில் எதிர்மறையான ரோலில் சிவாஜியுடன் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்.

இவர் விமான பணிப்பெண் வேலைக்கு செல்ல எடுத்த புகைப்படம்தான் இவரை நடிகையாக்கியது. அந்த புகைப்படம்தான் இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த இயக்குநர் பாலகுருவிடம் சென்றது. அதன்பேரில்தான் அவருக்கு கன்னி பருவத்திலே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்திலும் இவருக்கு வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அதை மறுத்துவிட்டார்.

பியூசி படித்திருந்தாலும் வடிவுக்கரசியின் ஸ்டைலிஷ்ஷான ஆங்கில பேச்சை கேட்ட பிறகுதான் இயக்குநர் பாரதிராஜா சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வடிவுக்கரசிக்கு சிறிய வேடத்தை கொடுத்துள்ளார். அருணாசலம் படத்தில் ரஜினியை விமர்சிக்கும் காட்சிகளில் வடிவுக்கரசியின் வில்லத்தனத்தை பார்த்து அங்கிருந்த ரஜினி உள்பட 2500 நடிகர், நடிகைகளும் கைதட்டி ரசித்தனராம்.

நடிகை வடிவுக்கரசியின் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தது. இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆரம்பத்தில் திரைத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்தால் இவர்கள் குடும்பமே ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்ததாம். பின்னர் படங்களில் நடித்து நல்லபடியாக சொத்துக்களை சேர்த்தார். இவர் தன் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் வடிவுக்கரசி டூரிங் டாக்கிஸில் இயக்குநர் சித்ரா லட்சுமணனுக்கு வடிவுக்கரசி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அப்போது எனக்கு மட்டும்தான் கார் கொடுத்தார்கள்.நான் காரை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தூரம் சென்றவுடன் பாக்கியராஜை ஏற்றிக் கொண்டு செல்வேன். அப்போது பாக்கியராஜ் பிரவீனாவுடனான காதல் குறித்தெல்லாம் என்னிடம் சொல்வார்.

இதே போல் நான் அவரை காரில் அழைத்துக் கொண்டு செல்வதை பார்த்த யாரோ தயாரிப்பாளர் ராஜ்கண்ணு சாரிடம் தவறாக சொல்லிவிட்டார்கள். நானும் பாக்யராஜும் லவ் செய்கிறோம் என சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்த ராஜ்கண்ணு சார், பாக்கியராஜ் சாரை அழைத்து திட்டுகிறார்.

பிறகு "என் காசுல எல்லாம் ஹனிமூன் கொண்டாடுறீங்களா. அவ அவ வந்தோமா வேலை செய்தோமானு இல்லாம ஹனி மூன் கொண்டாடுறீங்களா"ன்னு கேட்டார். அங்கு என்னை தவிர வேறு எந்த பெண்ணும் இல்லை, அதனால் அவர் என்னைத்தான் சொல்கிறார் என தெரிந்து கொண்டேன். எனக்கு கோபம் சுளீர் என ஏறியது.

பின்னர் ராஜ்கண்ணு கோயமுத்தூர் பாஷையில் அசிங்கமா திட்டினார், மிகவும் மோசமான வார்த்தைகளை பேசினார். எனக்கு கோபம் அதிகரித்து எழுந்து நான் உட்கார்ந்திருந்த நாற்காலியை மடித்து விட்டேன் பாருங்கள்" என வடிவுக்கரசி தனது வாழ்வில் நடந்த விஷயத்தை கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+