வள்ளியின் வேலன்: வள்ளிக்கு வரும் ஆபத்து.. வேலனை வெறுப்பேற்றிய வேதநாயகி- இன்றைய எபிசோட் அப்டேட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தன்னை விட்டு வேலன் பிரிந்து செல்வதாக சொல்ல ரத்தினவேல் அதை தடுத்து நிறுத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வள்ளி அப்பா தனக்காக சண்டை போட்டு கிழிந்த சட்டையை வைத்து கொண்டு அப்பாவிடம் பேசுவது போல் பேசி கொண்டிருக்க அங்கு வந்த வேலன் இந்த கிழிந்து போன சட்டை எதற்க்கு மேடம். நான் வேற ஏதாவது சட்டையை எடுத்து தரேன் என்று சொல்ல வள்ளி உனக்கு என்னுடைய பீலிங்ஸ் புரியாது என்று திட்டுகிறாள்.

மேலும் அப்படி என்ன மேடம் பீலிங்ஸ் என்று கேட்க உன் அம்மாவுக்கு பிடித்த கலர் என்ன? உங் தங்கச்சிக்கு பிடித்த ஹீரோ யார் என கேள்வி மேல் கேள்வி கேட்க வேலன் புரியாமல் நிற்கிறான். அதன் பிறகு வள்ளி சரி வா காலேஜ் போகலாம் என்று கூட்டி வர வேலனை பார்த்த வேதநாயகியும் ரஞ்சித்தும் ரத்தினவேலை முதுகில் குத்த போகும் கட்டப்பா இவன் தான் என்று மறைமுகமாக பேச வேலன் கோபமடைகிறான்.
உடனே உள்ளே வந்த கட்டப்ப்பா மட்டுமில்ல கட்டம்மா கூட இருக்கலாம் என்று வேதநாயகியை வம்பிழுத்து பதிலடி கொடுத்து விட்டு செல்கிறான், காரில் போகும் போது வள்ளியும் கட்டப்பா என்று கலாய்க்க வேலன் காரை நிறுத்து விட்டு ஒரு வேலை ஐயாவை முதுகில் குத்துற மாதிரி வந்தா நான் என் கழுத்தை அறுத்துப்பேன் என்று சொல்கிறான்.
அடுத்து காலேஜில் ஷரத் என்பவன் பெண்களிடம் வம்பிழுத்தபடி இருக்க அங்கு வந்த ரஞ்சித் அவனிடம் பணத்தை கொடுத்து வள்ளியிடம் நீ செய்யுற குறும்பால் அவ இனி காலேஜ்க்கே வர கூடாது என்று சொல்கிறான். பிறகு காலேஜ்க்குள் நுழைய ரஞ்சித் ஹெல்மெட் அணிந்தபடி வெளியே செல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications