வள்ளியின் வேலன்: பத்த வைத்த வாத்தியார்.. ரத்தினவேல் எடுக்க போகும் முடிவு என்ன? இன்றைய எபிசோட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் ஆசிட் வீச வந்த நபர்களால் வள்ளி பயந்து போன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வேதநாயகி வள்ளியை கூப்பிட்டு ஏன் ஒரு மாதிரி இருக்க என்று கேள்வி கேட்க வள்ளி தனக்கு வந்த மிரட்டல்களால் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ரத்தினவேல் வந்ததும் வள்ளிக்கு காலேஜில் ஏதோ பிரச்சனை போல.. ஒரு மாதிரி இருக்கா என்று கோர்த்து விடுகிறாள்.

இதை தொடர்ந்து ரத்தினவேல் என்ன பிரச்சனை என்று கேட்க வள்ளி எதுவும் இல்லை என்று சொல்லி விடுகிறாள், அடுத்து வேலனுக்கு வீட்டில் இருந்து போன் வந்து கொண்டே இருக்க அவன் வீடு வரைக்கும் போயிட்டு வருவதாக கிளம்பி வருகிறான்.

ஆனந்திக்கு போன் செய்து என்னாச்சு எதுக்கு போன் பண்ணிட்டே இருக்க என்று விசாரிக்க வள்ளிக்கு காலேஜில் நடந்த விஷயம் பற்றி சொல்கிறாள். உடனே வேலன் வள்ளியை சந்தித்து என்னாச்சு என்ன பிரச்சனை என்று விசாரிக்க வள்ளி தனக்கு வந்த மிரட்டல்களை நினைத்து எதுவும் சொல்லாமல் இருக்கிறாள்.

பிறகு கீழே வர வள்ளியை காப்பாற்றிய தமிழ் வாத்தியார் வீட்டிற்கு வந்து உங்க பொண்ணோட உயிருக்கு ஆபத்து இருக்கு சொல்லி கொண்டிருக்க அதை பார்த்து ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வள்ளிக்கு பார்டி கார்ட் வைக்க வேண்டும் என்று வாத்தியார் சொல்கிறார். அதற்கு ரத்தினவேல் சரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications