வள்ளியின் வேலன்: ரேணுகாவை வைத்து வேதநாயகி செய்த சதி.. வேலன் செய்ய போவது என்ன? இன்றைய எபிசோட் அப்டேட்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வேதநாயகி வள்ளியின் அம்மா பெயரில் நியூஸ் பேப்பரில் போலியான செய்தியை கொடுத்த வள்ளியின் பிறந்தநாளுக்கு எல்லாரும் வாழ்த்து சொல்கின்றனர், அந்த நேரத்தில் ரத்தினவேல் வேலன் எங்க போய்ட்டான்? அவன் தானே எப்பவும் உன் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவான் என்று சொல்லி கேட்க வள்ளி கல்யாண வேலை விஷயமா வெளியே போய் இருப்பதாக சமாளிக்கிறாள்.
இதே நேரத்தில் வேலன் வள்ளியின் பிறந்த நாளுக்காக கோவிலில் அன்னதானம் கொடுத்து கொண்டிருக்கிறான், வள்ளி கோவிலுக்கு வருகிறாள். வேலனை சந்தித்து எப்போதும் போல் பேசி கொண்டிருக்கிறாள்.

இந்த சமயத்தில் வள்ளியின் அம்மா மயங்கி கீழே விழ இதை பார்த்த வேலன் வள்ளி என இருவரும் ஓடி போய் அவரை தூக்கி உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துகின்றனர்.
அடுத்து வேலன் வள்ளிக்கு இன்னைக்கு பிறந்த நாள் என்று சொல்ல வள்ளியின் அம்மா வள்ளியை பார்த்து எமோஷனாக பேசுகிறாள். அம்மா என்பது தெரியாமல் வள்ளி அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறாள்.
இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ரத்தினவேல் வேலனை வீட்டிற்கு வர வைத்து நியூஸ் பேப்பரை காட்டி இது என்னனு கொஞ்சம் பாரு என்று சொல்ல வேதநாயகி பதற்றம் அடைகிறாள், இந்த விஷயமாக நாம எதாவது பண்ணா அது அவளை மிரட்டுற மாதிரி ஆகிடும் என்று சொல்ல ரத்தினவேல் அமைதியாகி விடுகிறார்.
அடுத்து வள்ளி வேலனை சந்தித்து நீ எதுக்கு இப்படி இருக்க.. எப்பவும் போல அப்பாவுக்கு பக்கபலமா இரு என்று சொல்கிறாள், அதை தொடர்ந்து வேதநாயகி ரேணுகாவுக்கு போன் போட்டு நாளைக்கு நலங்கு வைக்க சொல்கிறாள். ரேணுகா அதுக்கு இன்னும் 3 நாள் ஆகும் என்று சொல்கிறாள்.

நாளைக்கு வள்ளிக்கு நலங்கு.. வேலன் இங்க வர கூடாது, அப்போது தான் உனக்கும் வேலனுக்கும் கல்யாணம் நடக்கும் என்று சொல்ல ரேணுகா சம்மதம் சொல்கிறாள். பிறகு வேலனிடம் நலங்கு குறித்து பேச வேலன் மறுப்பு தெரிவிக்க ரேணுகா ஆனந்தி வாழ்க்கை, என் அப்பா அம்மாவை நினைச்சு பாருங்க என்று சொல்லி சமாளிக்கிறாள். இதனால் வேலனும் சம்மதம் சொல்கிறான்.
அடுத்து வள்ளிக்கு நலங்கு வைக்கும் வேலைகள் நடக்க ரத்தினவேல் வேலனை கேட்க வள்ளி அவனுக்கும் இன்னைக்கு தான் நலங்கு, ரொம்ப மாறிட்டான் என்று சொல்கிறாள். இங்கே வேலன் அப்பாவிடம் வள்ளிக்கு இன்னைக்கு நலங்கு, நான் அங்கு போகணும் என்று சொல்ல அவர் நீ போ நான் இங்க பார்த்துக்கறேன் என்று அனுப்பி வைக்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications