பொன்னியின் செல்வன் அருண்மொழி வர்மன்.. ராதிகாவின் கோடீஸ்வரியில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பல்சுவைக் கேள்விகளும் சுவைபட கேட்கப்படுகின்றன.

பல கேள்விகள் நம்மையும் சிந்திக்க வைக்கின்றன. அதில் ஒன்றுதான் அபிநயாவுக்கு கேட்கப்பட்ட கேள்வி.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் குறித்த கேள்வி ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.

 பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவலின் தலைப்பில் உள்ள பொன்னி இவற்றில் எதை குறிக்கிறது என்று கேள்வி கேட்டு, ஆப்ஷனாக, நெல் வயல்கள், தஞ்சாவூர், காவேரி ஆறு, தங்கம் என்று நான்கு கொடுத்தார்கள். அந்த பெண் முதலில் லைஃ ப் லைன் கேட்டார். டிக் டக் டீச்சர் டைமர் ஆஃப் பண்ணியது.

 எக்ஸ்பர்ட் உதவி

எக்ஸ்பர்ட் உதவி

எக்ஸ்பர்ட் உதவி கேட்டார் அபிநயா.. எக்ஸ்பர்ட் கல்பனா இருந்தார். அவர் காவேரி ஆறு என்று பதில் சொன்னார். காவேரி மண்டலத்தில் இருந்துதான் பொன்னியின் செல்வன் வந்தார். காவேரியின் செல்வன்தான் பொன்னியின் செல்வன் என்று பதில் சொன்னார் கல்பனா.

 பல்சுவை விஷயங்கள்

பல்சுவை விஷயங்கள்

அறிவியல், தொழில் நுட்பம், சினிமா,சரித்திர நாவல்கள் என்று அனைத்திலும் இருந்து பல்சுவையான கேள்விகள் கேட்கப்படுவது நிகழ்ச்சிக்கு சுவை கூட்டுவதாகத்தான் இருக்கிறது. ராதிகா சரத்குமார் நிகழ்ச்சியை நடத்தி வருவது பல பெண்களுக்கு பிடித்து இருப்பதோடு, உத்வேகம் கொடுப்பதாகவும் இருக்கிறது.

 பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் திரும்ப திரும்ப படித்து வருகிறார்கள். படிக்காதவர்கள் இப்படியான தகவல்களை அறிந்து இன்னமும் தேடி வாங்கி படித்து வருகிறார்கள். தவிர இப்போது இந்த நாவல் படமாகவும் எடுக்கப்படும் முயற்சிகள் நடைபெற்று வருவதால் வரும் வருடத்தின் புத்தகத் திருவிழாவில் பொன்னியின் செல்வன் விற்பனையில் தனி முத்திரையைப் பதிக்கும் என்று நம்பலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+