Vijay TV Pugazh: தந்தை இறப்பு குறித்து உருக்கமாக பதிவு போட்ட விஜய் டிவி புகழ்.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: விஜய் டிவி மூலம் மக்கள் மனதில் தனித்த இடத்தை பிடித்த நடிகர்களில் ஒருவர் புகழ். எப்போதும் சிரிப்பு, நகைச்சுவை, எளிமை என்ற அடையாளங்களோடு ரசிகர்களை மகிழ்வித்தவர், இன்று தனது வாழ்க்கையின் மிகப் பெரிய துக்கத்தை எதிர்கொண்டிருக்கிறார். நடிகர் புகழின் தந்தை காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரமான தகவலை, புகழ் தானே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எந்த பெரிய விளம்பரமும் இல்லாமல், மிக எளிமையாகவும், மனம் உடைந்த நிலையிலும் அவர் வெளியிட்ட அந்த பதிவு, பலரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த பதிவில், "என்கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டியே தெய்வமே.. இப்போ சொல்லாம போயிட்டியே" என்று உருக்கமாக பகிர்ந்து இருக்கிறார். ஒரு நடிகராக மக்களை சிரிக்க வைக்கும் புகழ், ஒரு மகனாக தந்தையை இழந்த வலியை அந்த பதிவில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

புகழ் என்ற பெயர் இன்று தமிழ் ரசிகர்களுக்கு புதிதல்ல. விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி உலகில் அறிமுகமான அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் உண்மையான பிரபலமாக மாறினார். குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 2-ல் அவரது காமெடி, உடல் மொழி, இயல்பான பேச்சு ஆகியவை குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த நிகழ்ச்சி தான் புகழின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, புகழுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அயோத்தி, 1947, யானை போன்ற படங்களில் நடித்ததன் மூலம், நகைச்சுவை நடிகராக மட்டுமல்ல, கதைக்கு தேவையான உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய நடிகர் என்பதையும் அவர் நிரூபித்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை பயணித்த புகழ், தன்னுடைய கடின உழைப்பின் மூலம் இந்த இடத்தை அடைந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
புகழின் இந்த வளர்ச்சிக்கு, அவரது குடும்பம், குறிப்பாக தந்தையின் ஆதரவு மிக முக்கியமானதாக இருந்ததாக பல முறை அவர் பேட்டிகளில் கூறியிருக்கிறார். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, இன்று தமிழ் சினிமாவில் ஒரு அடையாளம் உருவாக்கிய புகழுக்கு, அவரது தந்தை தான் முதல் தூணாக இருந்தார் என நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

தந்தை மறைவுச் செய்தி வெளியானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரும் புகழுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். "வலிமையாக இருங்கள்", "உங்கள் தந்தையின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்" போன்ற வார்த்தைகள், புகழுக்கு ஆதரவாக குவிந்து வருகிறது.
எப்போதும் மக்களை சிரிக்க வைக்கும் நடிகர் புகழின் வாழ்க்கையில், இன்று சோக நாள். ஆனால், அவர் தந்தை விட்டுச் சென்ற நினைவுகளும், ஆசீர்வாதங்களும், புகழின் பயணத்தை தொடர்ந்து வழிநடத்தும் என்பதில் ரசிகர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications