Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகார்த்திகேயனோடு நான் பேசமாட்டேன்.. அதற்கு காரணமே இதுதான்.. வி.ஜே பாவனா ஓப்பன் அப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களுக்கு பிரபலமடைந்த விஜே பாவனா சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும்போது கூட சிவகார்த்திகேயனோடு அதிகமாக பேச மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அதோடு தான் சிவகார்த்திகேயனோடு பேசாததற்கு காரணம் என்ன என்பது பற்றியும் அந்த பேட்டியில் விஜே பாவனா மனம் திறந்து இருக்கிறார். அதுபோல தான் எதனால் விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் என்பது பற்றியும் அந்த பேட்டியில் பாவனா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

VJ Bhavana about not talking much with Sivakarthikeyan

அந்த வகையில் ஆறு வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் மட்டுமே தொகுப்பாளராக கலந்து கொண்ட விஜே பாவனா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய தொகுப்பாளர்கள் வாழ்க்கையில் நடந்த பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார்.

அதில் நான் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும்போது மாகாபா சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் போன்றவர்களோடு சேர்ந்து தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். அதில் மாகாபாவுக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். நாங்கள் இருவரும் இதைத்தான் பேசப்போகிறோம் என்று பேசி வைத்து எல்லாம் பேசியது கிடையாது. அந்த டைமில் என்ன தோன்றுகிறதோ அதை பேசுவோம் ஆனால் மற்றவர்களோடு பேசும்போது நாங்கள் என்ன பேசப்போகிறோம் அதற்கு இன்னொருவர் என்ன கமண்ட் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் எழுதி வைத்துக்கொண்டு தான் பேசுவோம்.

ஆனால் நான் சிவகார்த்திகேயனோடு அதிகமாக பேசமாட்டேன் காரணம் நான் தொகுப்பாளராக இருக்கும்போது ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் கண்டஸ்டண்டாக தான் விஜய் டிவியில் இருந்தார். பிறகு அவர் என்னோடு தொகுப்பாளராக மாறி இருந்தார். ஆனாலும் எங்கள் இருவருக்கும் ஒரு டிஸ்டன்ஸ் இருக்கத்தான் செய்தது. அதுபோல என்னோடு விஜய் டிவியில் விஜய் தொகுப்பாளராக இருக்கும்போது அவர் என்னை குருநாதா என்று சொல்வார்.

நான் அவரிடம் எப்போதும் எனக்கு ஒரு ராசி உண்டு என்னோடு தொகுப்பாளராக இருப்பவர்கள் எல்லாரும் பெரிய திரைக்கு போய்விடுவார்கள். அதனால் நீங்களும் போய்விடுவீர்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். ஆனால் விஜய்க்கு பெரிய அளவில் இன்னும் அவருடைய திறமைக்கு தகுந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போது, நாம் எந்த இடத்தில் வேலை பார்த்தாலும் சரி அங்கே சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

நாம என்னதான் பெஸ்ட் ஆக வேலை செய்தாலும் ஆண்களுக்கு தான் அங்கு முன்னுரிமை கொடுப்பார்கள். நம்மை இரண்டாம் பட்சமாக தான் பார்ப்பார்கள் என்று வேதனையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு தன்னை பார்க்கும் பலரும் குழந்தை இன்னும் இல்லையே ஏனென்று கேட்கிறார்கள். இந்த வார்த்தையை கேட்கும் போது தான் கடுப்பாக இருக்கும். அது நம்முடைய பர்சனல் அதை ஏன் இவர்கள் கேட்கிறார்கள் என்று சொல்ல தோணும் ஆனாலும் நான் அதை இப்போது கண்டு கொள்வது கிடையாது என்று விஜே பாவனா பேசியிருக்கிறார்.

அதே நேரத்தில் விஜே பாவனா ஆரம்பத்தில் ராஜ் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்து பிறகு விஜய் டிவியில் முழு நேர தொகுப்பாளராக மாறி இருந்தார். அந்த நேரத்தில் சூப்பர் சிங்கர், ஜூனியர் ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். அதற்கு பிறகு தான் அவர் 2017 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு பத்திரிகையாளராக தேர்வாகிய இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் மற்றும் கபடி லீக்கில் ஒளிபரப்புகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+