முல்லையை இழந்து... தனம் அக்காவின் மெளன அழுகை..!
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முல்லை இனி இல்லை என்பதேயே யாராலும் நம்ப முடியவில்லை. அந்த சீரியலில் சித்ராவுடன் நடித்த ஒவ்வொருவரும் துவண்டு போயுள்ளனர்.
இனி முன்பு போல இயல்பாக நடிக்க முடியுமா என்று கூட தெரியவில்லை.அப்படி நொறுங்கிப் போயுள்ளனராம் ஒவ்வொருவரும்.
முல்லை கேரக்டருக்கு அடுத்து மக்களால் அதிகம் ரசிக்கப்படும் கேரக்டர் மூத்தவரான தனம் கேரக்டர்தான். பிரபல நடிகை சுஜிதாதான் இந்த தனம் கேரக்டரில் நடித்து வந்தார்.

மூத்த மருமகள் தனம்
ஒரு குடும்பத்தில் மூத்த மருமகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணமாக தனம் கேரக்டரைத்தான் பலரும் குறிப்பிட்டு சொல்வார்கள் .அந்த அளவுக்கு அருமையான பாத்திரம் இது .இந்த கேரக்டரில் எதார்த்தமாக நடித்துக் கொண்டிருப்பவர்தான் தனம்.

முல்லை - தனம்
தனம் மற்றும் முல்லை கேரக்டர்கள்தான் இந்த தொடரின் முக்கிய அடிநாதமாகவே இருக்கிறது . வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளையெல்லாம் தனம்தான் தனது தலையில் போட்டுக் கொண்டு அதை சரி செய்ய ஓடி ஓடி பாடுபடுவார் .அவருக்கு உற்ற துணையாக இருந்தவர்தான் முல்லை .இப்போது முல்லை போன வீட்டை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார்கள் ரசிகர்கள்.

சந்தோஷம் போய் சோகம்
நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்தவர் தனம் .அவர் சமீபத்தில்தான் கர்ப்பம் தரித்தார் என்ற நல்ல செய்தி வந்து வீடே உற்சாகத்தில் மூழ்கிப் போயிருந்தது .இந்த நிலையில் முல்லையின் மரணச் செய்தி வந்து அனைவரையும் நிலை குலைய வைத்துள்ளது .இந்த சோகத்தை எப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் தாங்கிக் கொள்ளும் என்ற வேதனையும் கூடவே எழுந்துள்ளது.

தனத்துக்கு இழப்புதான்
சித்ராவின் மரணத்தை தனித்துப் பார்க்க முடியாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகவே ரசிகர்களும் பார்க்கிறார்கள். என்னதான் வேறு நடிகை வந்து நடித்தாலும் கூட சித்ராவின் இடத்தில் யாரையும் வைத்துப் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு ஒரு சீரியலை உயிரோட்டமாக வைத்துக் கொண்டு ரசிகர்களை இறுக்கிப் பிடிக்க முடியும் என்பதை காட்டி விட்டுச் சென்றுள்ளார் சித்ரா.

சந்தோஷம் பறி போனது
சமீபத்தில்தான் தனது வீட்டை ரசிகர்களுக்குசுட்டிக் காட்டி குதூகலித்திருந்தார் தனம். அந்த வீட்டில் அவர் காட்டிய கேரக்டர்களில் முல்லையும் இடம் பெற்றிருந்தார் .ஆனால் இப்படி ஆகும் என்று அப்போது தனம் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். அது தனது யூடியூப் சானலுக்காக செய்த செயல் அது. ஆனால் இன்று முல்லை அவர்களுடன் இல்லை என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லைதான்.

உடைந்து போய் விட்ட தனம்
சித்ராவின் மரணத்தால் தனமும் உடைந்து போயுள்ளார். அவரால் நீளமாக எழுதக் கூட முடியவில்லை. அமைதியாக உறங்கு முல்லை என்ற அர்த்தத்துடன் ஒரு புகைப்படத்துடன் சித்ராவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் தனம். உண்மையில் முல்லையின் இழப்பு தனத்துக்கும்தான் பேரிழப்பு.. அந்த முல்லையை பறி கொடுத்து விட்டு தனம் உடைந்து போயுள்ளார். உள்ளுக்குள் அழுது கொண்டுள்ளார்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications