வயிற்றில் குழந்தை இருக்கும்போது சூட்டிங்குக்காக ஆலியா செய்த செயல்..பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்
சென்னை: என்னதான் வேலை முக்கியமாக இருந்தாலும் அதற்காக இப்படியா?? என்று ஆலியா செய்த செயலை பார்த்து பலர் பதறி வருகின்றனர்.
Recommended Video
ராஜா ராணி சூட்டிங் ஸ்பாட்டில் ஆலியா நடந்து கொண்டதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
2022.. உங்கிட்ட கேக்குறது ஒண்ணே ஒண்ணுதான்.. 2021 எவ்வளவோ பரவாயில்லைனு சொல்ல வச்சிடாத!
ராஜா ராணி செம்பா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ஆலியா மானசா முதல் பாகத்தில் திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துவிட்டார். இந்த சீரியலின் கதாநாயகனை வாழ்க்கையில் கதாநாயகனாக இவர் தேர்ந்தெடுத்ததும் அவருடைய ரசிகர்கள் ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்பு வாழ்த்துக்களை கூறிவந்தனர். ராஜா ராணி முதல் பாகத்தில் செம்பா கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பதிந்து போன ஆலியா மானசாவிற்கு இப்ப வரைக்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இரண்டாம் பாகத்தில் சந்தியா
ஏற்கனவே ஆலியா மானசாவிற்க்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது அவர் இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் முதல் குழந்தை பிறந்து சிறிது காலம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது இரண்டாம் பாகமும் அவருக்கு நல்ல ஒரு கேரக்டரை கொடுத்திருக்கிறது. இந்த சீரியலில் சந்தியா கேரக்டரில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் இவர் இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான். இந்த சீரியலில் இவர் ஒரு போலீஸ் ஆபிசராக ஆசைப்பட்டுக் கொண்டு தனது கணவருக்காக அதை மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
படப்பிடிப்பு வீடியோ
தனக்கு பிடிக்காத திருமணமாக இருந்தாலும் தனது தந்தையின் ஆசைப்படி இவர் இந்த திருமணத்தை செய்து கொண்டதால் திருமணத்திற்கு பிறகு இது தான் தன் குடும்பம் என்று இவர் வாழ தொடங்கிவிட்டார். இந்த நிலையில் தற்போது சந்தியா தன்னுடைய கணவர் சரவணன் வெற்றிக்காகவும் அவருடைய திறமையை நிரூபிப்பதற்காக வும் போராடிக் கொண்டிருக்கிறார். சமையல் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் சரவணன் வெற்றி பெற்று வீடு திரும்பும் நிகழ்ச்சிகள் தற்போது படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு விளம்பரமா
கதையின்படி ஒரு ஆற்றைக் கடந்து ராஜா-ராணி-சீரியல் குழுவினர் செல்வது போன்று படமாக்கப்பட்டிருக்கிறது.ஏற்கனவே ஆலியாவிற்கு நீச்சல் தெரியாது. இந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆலியா மானசா அந்த ஆற்றை கடந்து செல்வதை பார்த்து ரசிகர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். என்னதான் இருந்தாலும் சூட்டிங்கிற்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று பலர் கூறி வருகின்றனர் ஆனால் பல நெட்டிசன்கள் அந்த அளவிற்கு ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை குறைவாகத்தான் வருகிறது. எதற்காக இந்த வீண் விளம்பரம் என்று தங்களுக்கே உரிய வழக்கமான நக்கலோடு கலாய்த்து வருகிறார்கள். இந்த எபிசோடு இன்னும் ஒரு சில வாரங்களில் ஒளிபரப்பப்படும்.