Sundari Neeyum Sundaran Naanum: பசிக்கறப்போ கிடைக்கும் சாப்பாடு எல்லாமே நல்ல சாப்பாடுதான்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு டீச்சர் தமிழ் சாப்பாடு எடுக்க வருகிறாள் என்று தெரிந்து விட்டது. அவளை பழி வாங்க வேலுவின் சித்தி சாப்பாட்டில் விஷம் கலந்துடறாங்க.

மயங்கி மயங்கி விழும் குழந்தைகளை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, தமிழ் பேசும் வசனம்தான் பசிக்கறப்போ கிடைக்கும் சாப்பாடு எல்லாமே நல்ல சாப்பாடுன்னு ஆசையா சாப்பிடற குழந்தைங்க அவங்க...

எது நடந்தாலும் என்ன.. ஏதுன்னு கூட கேட்க ஆளில்லாத குழந்தைங்க... என்னை பழிவாங்க அவங்க சாப்பாட்டில் எதுக்கு வேலு விஷத்தை கலக்கணும்னு புருஷன் வெலுவிடம் சொல்லி அழறா.

டைட்டில் சாங் இல்லை

டைட்டில் சாங் இல்லை

விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் திங்கள் முதல் சனி வரை மதியம் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியின் எந்த சீரியலுக்கும் டைட்டில் சாங் இல்லை. சீரியல் ஆரம்பிக்கும்போதே போட வேண்டிய பெயர்களை போட்டுவிடுவார்கள். அப்படித்தான் இந்த சீரியலும் ஆரம்பிக்கும்.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் பாடலே இந்த சீரியலுக்கு டைட்டிலாக உள்ளதால், எப்போதாவது கமலின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் பாடலை டைட்டில் சாங் போல ஒளிபரப்புவார்கள். இந்த சீரியலுக்கு அந்த பாடல் ஒளிபரப்புவது என்பது பொருத்தமாகவும், ரசிக்கும்படியும் இருக்கிறது.

பாட்டி சொல்

பாட்டி சொல்

வேலுவின் பாட்டியாக நடிகை லதா நடிக்கிறார். பாட்டியின் சொல்லைத் தட்டாதவனாக பேரன் வேலு இருக்கிறான். இவனுக்கு ஆசை ஆசையா தமிழை கல்யாணம் செய்து வைக்கறாங்க பாட்டி. தமிழ் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி பெற்று பள்ளி நடத்தி வருகிறாள். திருமணம் ஆன ஒரு சில மாதத்தில் தமிழ் தனக்கு எதிரி குடும்பத்தை சேர்ந்தவள் என்று பாட்டிக்குத் தெரிகிறது.

தமிழை வீட்டை விட்டு

தமிழை வீட்டை விட்டு

தமிழை வீட்டை விட்டு வெளியில் போன்னு துரத்திடறாங்க பாட்டி. இதை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கறாங்க வேலுவின் சித்தி. சித்தி தனது பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்ய, அதில் தமிழும் கலந்துக்கொண்டால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்ட வேலு, கோயிலில் சாப்பாடு மீந்து போயிருக்கு உங்க பள்ளி குழந்தைகளுக்கு வந்து சாப்பாடு எடுத்துட்டு போங்கன்னு போனில் ஆளைவிட்டு சொல்ல வைக்கிறான்.

சித்தி தமிழ்

சித்தி தமிழ்

வேலுவின் சித்தி உடனே அதில் விஷம் கலந்துடறாங்க.. தமிழ் சாப்பாடு எடுத்துட்டு போயி அதை சாப்பிட்ட குழந்தைங்க மயங்கி விழுது. குழந்தைங்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு நிற்கும்போதுதான் தமிழ் இதை கேட்கிறாள்.. என்ன நடந்தாலும் கேட்க ஆளில்லாத குழந்தைகள்.. பசிக்கும்போது கிடைக்கும் எல்லா சாப்பாடு நல்ல சாப்பாடுன்னு நினைச்சு சாப்பிடற குழந்தைங்க.. என்னை பழி தீர்க்க உன் சித்தி இந்த ஆயுதத்தையா கையில் எடுக்கணும்னு கேட்டு அழறா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+