லோகேஷ்.. மறக்க முடியுமா மர்மதேசம் கண்களை?
சென்னை: மர்ம தேசம் விடாது கருப்பு சீரியல் நடிகர் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலை இன்னும் பலரால் ஜீரணிக்க முடியவில்லை.. சிலரால் நம்பக்கூட முடியவில்லை.
மர்ம தேசம் விடாது கருப்பு.. இந்த சீரியலின் மெகா வெற்றிக்கு காரணம் என்ன என்ற மர்மத்தை இதுவரை யாராலும் அவிழ்க்க முடியவில்லை. 1996ம் ஆண்டு வெளியான இந்த சீரியல், ரசிகர்களுக்கு கொடுத்த அனுபவத்தை தருவதற்கு தமிழில் இன்னொரு தொலைக்காட்சி தொடர் இதுவரை வரவில்லை.
தொழில் நுட்பமாக இருக்கட்டும் .. காட்சியின் பரபரப்பு.. வேகம்.. நடிப்பு என எந்த அம்சமாக இருக்கட்டும், அப்பவே இப்படி ஒரு நெடுந்தொடரா என்று இப்போது youtube தளத்தில் பார்த்தாலும் மூக்கில் விரல் வைக்கிறார்கள்.
இத்தனை வருடங்களாக பேசுபொருளாக இருக்கும் மர்ம தேசம் சீரியலில் கதாநாயகன் இந்த லோகேஷ் தான் . மரணமடையும் போது 34 வயதை எட்டி இருந்த லோகேஷுக்கு, விடாது கருப்பு சீரியல் நடிக்கும் போது வயது 8 மட்டுமே. இந்தப் பிரபல நாடகத்தில் அந்த வயதிலேயே, இவர்தான் ஹீரோ . இப்படிச் சொல்ல கண்டிப்பாக உறுதியான காரணங்கள் இருக்கின்றன.

கண்களின் வழியே காட்சிகள்
விடாது கருப்பு சீரியல் ஆரம்பித்ததும் பிளாக் அண்ட் ஒயிட் வண்ண பிளாஷ் பேக் காட்சிகள் கண்முன்பு விரியத் தொடங்கும். அப்போது ராசுக்குட்டி என்ற கதாபாத்திரம் ஏற்ற இந்த லோகேஷ்தான் கதையின் நடு நாயகமாக இருப்பார். அவரது "கண்களின் வழியாகத்தான்" காட்சிகள் விரிவடையும். அவரது கோணத்தில்தான் கதை நகரும். இதற்கான காரணம் என்ன என்பது கிளைமேக்ஸ் கட்டமான 204வது எபிசோடில்தான் முழுமையாக ரசிகர்களுக்கு புரியும்.
கதாபாத்திரங்களின் ஒவ்வொரு குணாதிசயமும், அவர்களின் ஒவ்வொரு அசைவும், லோகேஷ் கண்ணின் பார்வை வழியாகத்தான் பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்டு இருக்கும். என்னதான் லோகேஷ் கதாபாத்திரத்தின் பெரிய வயது ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் சேத்தன் நடித்திருந்தாலும், சிறு வயது ராசு குட்டியின் ஜஸ்ட் பிம்பம்தான் அவர் என்பதுதான் கதை கரு. எனவே விடாது கருப்பு, ஹீரோ என்றால் லோகேஷ் தான்.

பிடித்த குழந்தை
பிறவி நடிகர் போல, அந்த கதாபாத்திரத்தை மிக எளிதாக கையாண்டு இருப்பார் ராசுக்குட்டி என்ற லோகேஷ். சுட்டியாகவும் அனைத்து கதாபாத்திரங்களின் செல்லமான பிள்ளையாகவும் வலம் வருவது அனைவரையும் கவர்ந்தது. அம்மா, அப்பாவின் செல்ல பிள்ளையாக, அப்பா சகோதரியான அத்தையின் அன்பு மருமகனாக, மாமாவுக்கும் பிடித்த வாண்டாக சுற்றிய பாத்திரம்தான் ராசு குட்டி. அவ்வளவு ஏன், வீட்டையும், ஊரையுமே, பயமுறுத்தும் பாட்டிகூட பேரன் என்ற வகையில் ராசுகுட்டியிடம் அடக்கிதான் வாசித்திருப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கதாநாயகன்
கதையின் நாயகனாக தனது கண்களின் வழியாக கதையை பார்வையாளர்களுக்கு கடத்தும் கருவியாக, ஒரு குட்டி, சுட்டி பையனாக வலம் வந்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர்தான் இந்த லோகேஷ். அந்த முட்டை வடிவிலான கண்கள், சேத்தனின் சின்ன வயது கதாப்பாத்திரம் என்பதற்கு நியாயம் கற்பித்திருக்கும்.

அன்றே அதிர்ச்சி கொடுத்த ராசுகுட்டி
விடாது கருப்பு சீரியலின் இறுதி பாகத்தில் , "நம்ம ராசுக்குட்டியா இப்படி.." என்று ஒரு அதிர்ச்சியான காட்சி வரும். யாருமே யூகித்திருக்க முடியாத அல்லது நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாத விஷயத்தை அந்த பிளாஷ்பேக் காட்சி கண் முன்னே காட்டியிருக்கும். அந்த அதிர்ச்சியில் இருந்து கூட ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. ஆனால் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி அத்துடன் கூட சேர்ந்து கொண்ட கொடுமையை என்ன சொல்வது? லோகேஷ் மறைந்தாலும், ராசுகுட்டியாக மக்களின் மனதில் என்றும் நீங்காமல் நிலை பெற்றிருப்பார் என்பதை தவிர?.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications