எனக்கு நிறைய தெய்வங்கள் இருக்காங்க.. ஆனால் நண்பன்னா அது விஜய்தான்.. நெகிழ்ந்த லாரன்ஸ்
சென்னை: சன் டிவியில் காஞ்சனா 3 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.படத்தில் நடித்த ஓவியா, வேதிகா, லாரன்ஸ், கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன்,சூரி உள்ளிட்டவர்கள் கலந்துக்கிட்டாங்க.
படத்தில் பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி, விவேகா போன்ற கவிஞர்களும் வந்திருந்தாங்க.லாரன்ஸ் வித்தியாசமாக இந்த படத்துக்கு 6 இசை அமைப்பாளர்களை பயன்படுத்திக்கிட்டாராம்.
கானா பாடல் இசை அமைப்பாளர் ஒருத்தர் நண்பனுக்கு கோயிலை கட்டுன்னு பாடல் எழுதி இசை அமைச்சு இருக்கார். ரசிகர்களுக்கும் இந்த பாடலில் பல வரிகளை சேர்த்திருக்கார்.
Kalyana Veedu Serial: நீலிக்கண்ணீர் வடித்த ரோஜா.. ஆனால் அந்த பேய்க் கதை சூப்பருங்கோ!
கேட்டார்
நண்பன்னு சொன்னா இண்டஸ்ட்ரியில உங்க நினைவுல வர்றவங்க யாருன்னு லாரன்ஸிடம், ஸ்ரீமன் கேட்டார் அப்போது லாரன்ஸ் டக்கென்று சொல்லனும்னா விஜய்தான் என் நண்பன். .அவருக்கும் என்கிட்டே எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. எனக்கும் அவர்கிட்ட எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.
இருவரும்
அதனால, நண்பன்னு சொன்னாலே முதலில் நினைவுக்கு வர்றது விஜய் சார்தான்னு சொன்னார். திருமலை படத்தில் இருவரும் ஒரு பாடலில் சேர்ந்து நடனம் ஆடி அசத்தி இருப்பார்கள்.
லாரன்ஸ்
ஒவ்வொரு படம் அல்லது பாடல் வெளியீட்டின் போதும் ஏதாவது புதுமை செய்யும் லாரன்ஸ் மாஸ்டர், இந்த முறை வீட்டை விட்டு வெளியில் துரத்தப்படும் திருநங்கைகளுக்கு ஹோம் ஒன்று கட்ட எண்ணூர் அருகில் இடம் வாங்கி கொடுத்து இருக்காராம்.
மார்க்கமுண்டு
மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பது போல கட்டிடம் கட்ட நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவ முன் வர வேண்டும் என்று லாரன்ஸ் மாஸ்டர் கேட்டுக் கொண்டார்.