பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ஆர்யன்... "இதுதான்" காரணமா?.. மகிழும் ரசிகர்கள்!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து செழியன் கேரக்டரில் நடித்து வந்த ஆர்யன் "இதற்காக" தான் விலகிவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலை தினந்தோறும் மக்கள் பார்த்து வருகிறார்கள். இந்த சீரியலுக்கு குடும்பத் தலைவிகள் ஆஜராகிவிடுகிறார்கள்.
இது இல்லத்தரசிகளின் ஃபேவரைட் சீரியலாகவே இருந்து வருகிறது. வெளியே வேலைக்குச் செல்லாமல் வீட்டில் ஹவுஸ்ஃவைய்ப்பாக இருக்கும் பெண்கள் எத்தகைய கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்திக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்வதுதான் பாக்கியலட்சுமி.
ஜெ.மனநிலையில் வலம் வரும் சசிகலா... சரிசமமாக அமர்ந்த ஓபிஎஸ் தம்பி - திருச்செந்தூரில் நடந்தது என்ன
செழியன் கதாபாத்திரம்
இந்த சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்து வந்தார். இவருக்கு அண்மையில்தான் ஷபானாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்த வாரம் முதல் இவருக்கு பதில் வேறு ஒருவர் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பாக போகிறது.
சீரியல்
இந்த நிலையில் ஆர்யன் ஏன் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார் என்பதற்கான காரணங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது விஜய் டிவியின் புது சீரியலாக கனா காணும் காலங்கள் 2 வெளியாகவுள்ளது. இந்த தொடர் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
பாக்கியலட்சுமி
இதில் நடிப்பதற்காகத்தான் ஆர்யன், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார் என சொல்லப்படுகிறது. அது போல் ஆர்யன் எப்போதும் லைவ் வீடியோவில் ரசிகர்களுடன் பேசுவார். அது போல் அவர் பேசும் போது பாக்கியலட்சுமியிலிருந்து ஏன் விலகினீர்கள் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆர்யன், அதை ஏன் ஞாபகப்படுத்துறீங்க என்றார்.
கனா காணும் காலங்கள் 2 ப்ரோமோ
எனவே அவர் நிச்சயம் கனா காணும் காலங்களில் கமிட் ஆகியிருப்பார் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த தொடருக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை விட இது மாணவர்கள், இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.