கமல்ஹாசன் செயலால் கதறி அழுத மனோபாலா..காரணம் இதுதானா? ரகசியத்தை உடைத்த நடிகை
சென்னை: நடிகர் மனோபாலா பற்றி நடிகை சுஹாசினி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் மனோபாலாவுக்கும் கமல்ஹாசனுக்கும் இருந்த பிரச்சனையின் காரணமாக இருவரும் சில காலம் பேசாமல் இருந்திருக்கின்றனர்.

ஆரம்பத்தில் மனோபாலாவிற்கு அடைக்கலம் கொடுத்தது கமல்ஹாசன் தான். ஆனால் பிறகு கமல்ஹாசன் செய்த செயலால் பலமுறை மனோபாலா அழுததாக சுஹாசினி கூறி இருக்கிறார்.
மனோபாலா தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கலைஞர். சமீபத்தில் அவர் மரணம் அடைந்தது இப்ப வரைக்கும் அவருடைய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர் வருத்தப்பட்ட ஒரு நிகழ்வு பற்றி சுஹாசினி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு இயக்குனராக அறிமுகமான மனோபாலா பிறகு தயாரிப்பாளராக மாறி அதைத்தொடர்ந்து நடிகராகவும் பலருக்கும் பரிச்சயமாக மாறி இருந்தார். இந்த நிலையில் இயக்குனராக மனோபாலா இருந்த காலகட்டத்தில் கமல்ஹாசன் வீட்டில் தான் தங்கி இருந்தார். அவருடைய வீட்டில் பல மாதங்கள் இருந்ததாகவும் கமல்ஹாசனுடைய மனைவிதான் தனக்கு சாப்பாடு கொடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் மனோபாலா கூறி இருந்தார்.
ஆனால் ஒரு காலகட்டத்தில் மனோ பாலாவும் கமலும் இருவரும் பேசிக் கொள்வது இல்லையாம். இதில் கமல் தான் மனோபாலாவை அப்படியே ஒதுக்கி விட்டாராம். மனோபாலா இருக்கிறார் என்றால் அந்த இடத்திற்கே கமல் வர மாட்டாராம். மனோ பாலா இருக்கும் பக்கத்தை கூட திரும்பிப் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு கமல் பலமுறை சென்று இருக்கிறாராம்.

அந்த நிலையில் சுஹாசினி இடம் சென்று மனோபாலா கமலை என்னிடம் பேச சொல்லுங்கள் என்று அழுது இருக்கிறாராம். உங்கள் சித்தப்பா உலகத்தில் எல்லோரிடமும் பேசுகிறார். என்கிட்ட பேச மாட்டேன் என்கிறார் என்று கூறியிருக்கிறாராம். அதோடு சுஹாசினி பேசுகையில் மனோபாலா எப்போதும் மனதில் பட்டதை பேசி விடுவார். அப்படித்தான் ஏதாவது கமல் படம் பற்றி அப்போது பேசியிருப்பார். அதனால் சண்டையாகி இருக்கலாம் என கூறி இருக்கிறார்.
ஆனால் மனோபாலாவின் கடைசி காலகட்டத்தில் கமல்ஹாசன் மீண்டும் அவரோடு பேசி பழகி வந்ததாகவும் சுஹாசினி கூறி இருக்கிறார். அதனால் தான் மனோபாலாவின் மரண செய்தி கேட்டதும் தன்னுடைய வருத்தத்தை சமூக வலைத்தளர் பக்கங்களில் உருக்கமாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications