தேர்தல் முடிவுக்குப் பிறகாவது நம்முடனேயே இருப்பாரா கமல்.. கவலையில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், இந்தியன் 2க்கு பிறகு நடிப்பதில்லை என்கிற முடிவை மாத்திப்பாரா என்று ரசிகர்கள் ஏக்கத்தில் இருக்காங்க.
இந்தியன் 2 அறிவிச்ச உடனேயே கமல்ஹாசன் தீவிர அரசியலில் குதிச்சுட்டார். இயக்குநர் ஷங்கருக்கு காலதாமதத்தால் நெருக்கடி.

அதோடு ஷங்கரின் பட்ஜெட் ஏகத்துக்கும் அதிகமாக இருந்ததில் பயந்துட்டாங்க லைக்கா.. ரிலையன்ஸ் பைனான்ஸ் பண்ண முன் வந்தாலும், நான்கில் ஒரு பங்கு பணத்தை போட்டு படப்பிடிப்பை ஆரம்பிச்சாதான், மீதி பணத்தை கொடுப்போம்னு சொல்லிட்டாங்களாம்.
எப்போதுமே ரிலையன்ஸ் ஃபைனான்ஸ் பண்ணினால் இந்த விதிமுறைதானாம். ஷங்கருக்கு இது ஒத்து வராததால் சன் டிவிகிட்ட போகப்போறதா சொல்றாங்க.
ஆனா, இதில் கமல்ஹாசன் நடிகர் என்பதால் சன் டிவி ஒத்துக்க மாட்டாங்கன்னு இண்டஸ்ட்ரியில பேச்சு அடிபடுது. இப்போது தயாநிதி மாறன் தீவிரமாக திமுகவில் இருக்கறதுனால, திமுகவை தேர்தலின் போது சகட்டு மேனிக்குத் திட்டின கமலை ஏற்க, சன் டிவி சம்மதிக்க மாட்டாங்கன்னும் பேசிக்கறாங்க.
நம்ம கமல்ஹாசன் வேற அவசரப்பட்டு இந்தியன்தான் தன் கடைசி படம்னு அறிவிச்சுட்டார். இது இழுபறியாக இருக்கும் இந்த நேரத்தில் கமல் தேர்தல் முடிவுக்கு பின்னர், தமது முடிவை மாத்திகிட்டு, இனி படங்களில் நடிக்க அறிவிப்பு வெளியிடுவாரா என்கிற ஏக்கத்தில் ரசிகர்கள் இருக்காங்க...
ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைப்பாரா கமல்...!












Click it and Unblock the Notifications