புஸ்ஸூனு உப்பிய உடம்பு.. நடிகை சுஹாசினிக்கு காசநோய்? சமூகத்துக்கு சொல்லணும் என ஓபன் டாக்: பிரபலம்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் குடும்பத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை சுஹாசினி... இவர் 1980 மற்றும் 90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போதும் கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றிலும் தெரிவித்துள்ளார்.
Gem Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "நடிகை சுஹாசினி, டைரக்டர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு நந்தன் என்ற ஒரு மகன் இருக்கிறார். ஒரு கம்யூனிஸ்ட் கொள்கையில் தீவிரமானவர்..

நெஞ்சத்தை கிள்ளாதே
இந்திரா என்ற படத்தை இயக்கியதற்காக சுஹாசினிக்கு தேசிய விருது கிடைத்தது.. நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் மகேந்திரன் இயக்கத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருந்தார் சுஹாசினி..
பாலச்சந்தர் எழுதிய இயக்கிய சிந்துபைரவி படத்தில், சுஹாசினியின் நடிப்பு அனைவராலும் புகழப்பட்டது. இப்போது மணிரத்னத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறார்.
சமூகத்துக்கு தெரிவிக்கிறேன்
சில தினங்களுக்கு முன்பு, சுஹாசினி தந்திருந்த பேட்டியில், "எனக்கு 10 வயதாக இருக்கும்போது காசநோய் வந்தது.. உடனே தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டதன் காரணமாக, காசநோய் அப்போது போய்விட்டது... இப்போது சமீபத்தில் மீண்டும் காசநோய் பாதிப்பு ஏற்பட்டு நான் மிகுந்த சிரமப்பட்டேன். பிறகு அதிலிருந்து மீண்டுவிட்டேன்.. அப்போது என்னுடைய உடம்பு உப்ப தொடங்கியது.. சரியான நேரத்தில சிகிச்சை எடுத்து கொண்டால், பாதிப்பு நீங்கிவிட்டது.
இதை அப்போது யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டேன். வெளியே சொல்வதை கவுரவ குறைச்சலாக நினைத்து 6 மாதங்கள் ரகசியமாகவே சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அதை இப்போது சமூகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வெளியே சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
கேட்கும் திறனும் பாதிப்பு?
முன்னதாக சுஹாசினி இந்த தகவலை பொதுவெளியில் சொல்லும்போது, 6 வயதில் ஏற்பட்ட காசநோய் வியாதி, 36 வயதில் மீண்டும் வந்து விட்டது. இதன் காரணமாக எனக்கு திடீரென்று எடை கூடி விட்டது. அதுமட்டுமன்றி கேட்கும் திறனிலும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். மெல்ல மெல்ல காச நோய் பாதிப்பு குறைந்து குணமாகி விட்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications