அடடா... தேவராஜுக்கே ஆபத்து... மீனுல குண்டை கண்டுபிடிச்சுட்டாளே யாழினி
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் ஒவ்வொரு எபிசோடும் திக் திக்னு திகிலா இருக்கு.
காரணம்..பேயோ.பிசாசோ, கெட்ட சக்தியோ இல்லை. இருவருக்கும் இடையேயான பகை,வன்முறை, குரோதம்தான்.
தேவராஜ் குடும்பமும், நாகப்பன் குடும்பமும்தான் பயத்துல இருக்காங்களே தவிர தேவராஜும், நாகப்பனும் ஜாலியாத்தான் இருக்காங்க.
மா விளக்கு கையில்...சல்லடையில் பார்த்தா கட்டிக்கப் போறவன் முகம்...! ஆஹா...!
மீனுக்குள்ள குண்டு
நாகப்பனின் மூத்த மகள் யாழினி வீட்டுக்கு வந்த மீனுக்குள்ள குண்டு இருப்பதை கண்டு பிடிச்சு யாருக்கும் தெரியாம கடலில்கொண்டு போட்டுட்டு வர்றா. எங்கேம்மா போனேன்னு அப்பா கேட்க..விவரத்தை சொல்றா யாழினி.
வேலையைப் பார்த்தது?
வீட்டுக்கு மீனை கொண்டு வந்தது யாருலேன்னு கேட்கறார் நாகப்பன். ஆட்களும் அவனை சொல்ல, அதுக்குள்ளே தேவராஜ் ஆளுங்க விஷயமறிந்து அவனை கொன்னுடறாங்க.
போன தேவராஜ்
நடுகடலுக்கு பாதுகாப்புக்கு அழைத்து செல்லப்பட்ட தேவராஜை...நாகப்பன் கொடுத்த கெடு முடிஞ்சுருச்சு சார்... வாங்க வீட்டுக்கு போகலாம்னு போலீஸ் கூப்பிட, நீங்க போங்க சார்..நான் இங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்னு சொல்றன் தேவராஜ்.
விட்டுட்டு
தனியா விட்டுட்டு போக முடியாது சார்...நாகப்பன் குடுத்த கெடு முடிஞ்சு போச்சு..போலாம் வாங்கன்னு கூப்பிட யாரும் இருக்க வேணாம்.. நான்கொஞ்ச நேரம் தனியா இருந்துட்டு வரேன்னு சொல்றார் தேவராஜ்.
போலீசும் கவலை
எல்லோரும் போய்விட யாரோ தன்னைத் துரத்துவது போல உணரும் தேவராஜ் பயப்படுகிறார் முதன்முறையாக. தேவராஜ் இன்னும் வீட்டுக்கு வரலை. போலீசும் தேவராஜ் இரவாகியும் வீட்டுக்கு வரலேன்னு கவலையில இருக்காங்க.