கெட்டிமேளம் சீரியல்: விபத்தில் பறிபோன இரட்டை உயிர்.. நிறுத்தப்படும் துளசி கல்யாணம்! ஹீரோ செய்த செயல்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்ரீகாந்த் வந்த கார் லாரி மோதி பிறகு வெற்றி ஓட்டி வந்த கார் மோதி விபத்தில் சிக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்படுகின்றனர். வெற்றி அவர்களை பார்த்து விட்டு வருவதாக சொல்ல அவனது அப்பா எல்லாவற்றையும் நம்ம பசங்க பார்த்துப்பாங்க, நாமினேஷன் பண்ணணும் நீ வா என்று அழைத்து சென்று விடுகிறார்.

இருந்தாலும் வெற்றி தனது நண்பனுக்கு போன் செய்து அவர்களை எந்த ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறார்கள் என்று விசாரித்து வை என்று சொல்கிறான். ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் ராஜேஸ்வரி துளசியிடம் நீ தான் தியாவை பார்த்துக்கணும் என்று சத்தியம் வாங்கி உயிரை விடுகிறாள்.
அடுத்து வெற்றி இவர்களை பார்க்க ஹாஸ்பிடல் வருகிறான், அப்போது நர்ஸ் ஒருவர் B நெகட்டிவ் ரத்தம் தேவை.. யாராவது அந்த ப்ளட் குரூப் இருக்கீங்களா என்று கேட்க வெற்றி ரத்தம் கொடுக்கிறான். அடுத்து சிவராமன் மூத்த மகன் ரகுராமனுக்கு போன் போட்டு எல்லாருக்கும் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துடு என்று சொல்கிறார்.

ஆனால் ரகுராம் எல்லாருக்கும் பாதி பணத்தை கொடுத்து மீதி பணத்தை ஆட்டைய போடுகிறான். வெற்றி ரத்தம் கொடுத்து விட்டு வெளியே வர டாக்டர் விபத்தில் சிக்கிய மூணு பேரும் நல்லபடியா இருக்காங்க. அவங்களுக்கு சின்ன காயம் தான். பர்ஸ்ட் எயிட் செய்து அனுப்பியாச்சு என்று சொல்ல வெற்றி நிம்மதி அடைகிறான்.

ஆனால் இங்கே ஸ்ரீகாந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஷாக் கொடுக்கிறார் டாக்டர். இதனால் ஸ்ரீகாந்தின் தங்கச்சி மோனிகா எல்லாத்துக்கும் உன் ஜாதகம் தான் காரணம் என துளசி மீது பழி சுமத்துகிறாள். குழந்தைக்கு ப்ளட் கிடைத்ததால் தியா பிழைத்து விட்டதாக டாக்டர் சொல்கிறார். தியா துளசி அம்மா கூட தான் செல்வேன் என்று அடம் பிடிக்க மோனிகா அடிக்க கை ஓங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications