ஜீ தமிழ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய சஞ்சீவ்.. இனி இவருக்கு பதில் இவர்! பஞ்சாயத்துக்கு பஞ்சமில்லை
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான கில்லாடி ஜோடி இந்த வாரம் புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. இதுவரை உற்சாகமாக தொகுத்து வழங்கி வந்த சஞ்சீவ் திடீரென நிகழ்ச்சியில் காணாமல் போனது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகரும், தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ், இந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் மிகவும் கலகலப்பாக கொண்டு சென்று வந்தார். போட்டியாளர்களை கம்ஃபர்ட்டாக உணர வைப்பது, நகைச்சுவை கலந்த பேச்சு, பார்வையாளர்களை ஈர்க்கும் அனுசரணை - இவை எல்லாம் சேர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய பலமாகவே இருந்தது. டான்ஸ் மட்டுமல்ல, காடு மலை கடலில் நடக்கும் த்ரில்லிங் விஷயங்களும் அவரது தொகுப்பில் பெரிய ஹைலைட்டாக மாறியது.

மணிமேகலை என்ட்ரி
இப்படியான நிலையில் இந்த வார எபிசோடிற்கான ப்ரோமோ மற்றும் சேனல் வெளியிட்ட புகைப்படத்தில் சஞ்சீவ்க்கு பதிலாக புதிய தொகுப்பாளர் ஒருவர் இருப்பது தெரியவந்தது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், "இவர் மணிமேகலை தானே?" என்று சமூக வலைதளங்களில் பேச தொடங்கினர். இதனால் இனிமேல் சஞ்சீவ்க்கு பதிலாக மணிமேகலை தான் நிரந்தர தொகுப்பாளராக வரப்போகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.
மணிமேகலை என்றாலே கலகலப்பான பேச்சு, ஸ்பாண்டான காமெடி, போட்டியாளர்களுடன் கலந்துகொள்ளும் ஸ்டைல் - இவை ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவை. பல ரியாலிட்டி ஷோக்களில் தனது தனித்துவமான அனுசரணையால் பிரபலமான அவர், இந்த நிகழ்ச்சியிலும் அதே எனர்ஜியை கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால் இதற்கிடையில் சஞ்சீவ் ஏன் விலகினார் என்ற கேள்விதான் அதிகமாக எழுந்துள்ளது. அவர் சினிமா வாய்ப்புக்காக இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியாரா? அல்லது வேறு எந்த தனிப்பட்ட காரணமா? அல்லது இது தற்காலிக மாற்றமா? என்ற பல சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகாததால் அந்த குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
சஞ்சீவ் சின்ன திரையில் மட்டுமல்ல, சினிமாவிலும் நடித்தவர். பல சீரியல்களில் நடித்ததோடு, தொகுப்பாளராகவும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். குறிப்பாக நண்பர் விஜயுடன் அவருடைய நட்பு பற்றி அவர் பல நிகழ்ச்சிகளில் பகிர்ந்துள்ள சம்பவங்கள் ரசிகர்களிடம் வைரலாகி இருக்கும்.
மறுபுறம் கில்லாடி ஜோடி நிகழ்ச்சி, ஜோடிகளாக கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் மேடையாக இருந்து வருகிறது. சினிமா, டெலிவிஷன் பிரபலங்களும் கலந்துகொண்டு கலக்குகிறார்கள். ஒவ்வொரு வாரமும் வேறுவேறு தீம்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இப்போது இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மாற்றம் நடந்துள்ளது பார்வையாளர்களிடையே ஒரு புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மணிமேகலை வந்தால் நிகழ்ச்சியின் டோன் எப்படி மாறும்? சஞ்சீவ் மீண்டும் திரும்பி வருவாரா? அல்லது இது முழுமையான மாற்றமா? என்ற கேள்விகளுக்கான பதிலை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சஞ்சீவ் இல்லாத கில்லாடி ஜோடி மேடை ஒரு விதமாக மிஸ்ஸாக இருப்பதாக சிலர் கூறினாலும், மணிமேகலை தனது ஸ்டைலில் நிகழ்ச்சியை புதிய எனர்ஜியுடன் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்த மாற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பேசுபவர்கள் குறையப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.












Click it and Unblock the Notifications