பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து.. தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் சிதறி பலி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள பாரதப்புழா ஆற்றின் மேல் அமைந்துள்ளது சொர்ணூர் ரயில்வே பாலம். இந்தப் பாலத்தில் தொழிலாளர்கள் பலர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர்களும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில், ரயில்வே பாலத்தின் மீது தொழிலாளர்கள் சிலர் நடந்து சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில், டெல்லி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 3.05 மணியளவில் திடீரென வேகமாக வந்துள்ளது. அப்போது, ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதல்கட்ட விசாரணையில், ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன், ராணி, வள்ளி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதும், உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் பெண் ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒருவரது உடல் மட்டும் கிடைக்கவில்லை. ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆற்றில் தற்போது நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் உடலைத் தேடும் பணி நாளை நடைபெறவுள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது, பத்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ரயில் வருவதை அறிந்த 6 பேர் தண்டவாளத்தில் இருந்து வெளியே ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், ரயில் பாதை பராமரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. அண்மைக்காலமாக ரயில் விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications