கொரோனாவுக்கு மத்தியில் ஷிகெல்லா வைரஸ்.. கேரளாவின் கோழிக்கோட்டை ஆட்டி படைக்கும் பரிதாபம்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிகெல்லா எனும் பாக்டீரியா தொற்றால் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 11 வயது குழந்தை கடந்த வாரம் இறந்தார்.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக ஒரு பாக்டீரியா கேரளாவில் பரவி வருகிறது. அதற்கு ஷிகெல்லா என பெயரிடப்பட்டுள்ளது.

இது பாக்டீரியா வகையை சேர்ந்தது. இந்த பாக்டீரியா தொற்று ஏற்படும் நபருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி ஆகியவை அறிகுறிகளாக ஏற்படுகிறது. எனினும் சிலருக்கு அறிகுறியில்லாமலேயே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வயிற்றுப்போக்கு உள்ளிட்ட மேற்கண்ட அறிகுறிகள் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் அசுத்தமான உணவு, தண்ணீரில் இருந்து பரவுகிறது. கோழிக்கோட்டில் பரவிய இந்த நோய் கோட்டபரம்பு வார்டு வரை பரவியுள்ளது.
வார இறுதி நாட்களில் மருத்துவ முகாம்களை அமைக்க மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள். இதுவரை பாதிக்கப்பட்ட 6 நோயாளிகளின் மலத்தை எடுத்து சோதனை செய்ததில் அவர்களுக்கு ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்னும் 20 பேருக்கு இந்த வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 20 பேரில் 4 பேர் மட்டுமே பெரியவர்கள், மற்ற அனைவரும் குழந்தைகள் ஆவர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது குழந்தை கடந்த வாரம் பலியாகிவிட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications