அநீதி யாருக்கு நடந்தாலும் அதை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்.. நடிகை பாவனா பரபரப்பு போஸ்ட்
திருவனந்தபுரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் புயலை கிளப்பி வரும் நிலையில், நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராமில் சேகுவாராவின் பொன்மொழிகளை மேற்கோள்காட்டி சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை பாவனா தனது இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது: எல்லாவற்றையும் விட, இந்த உலகில் எங்கு யாருக்கு அநீதி நடந்தாலும் சரி, அதன் உண்மைத் தன்மையை ஆழமாக புரிந்து கொள்ளும் திறமை வேண்டும் என சேகுவாராவின் வாசகத்தை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளார்.

மலையாள திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி புயலை கிளப்பி வரும் நிலையில் நடிகை பாவனா தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார். மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து ஹேமா தலைமையில் ஒரு கமிஷன் ஏற்படுத்தப்பட்டது.
இந்த கமிட்டி, புகார் கொடுத்த நடிகைகளிடம் விசாரணை நடத்தி ஒரு அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், "மலையாள திரையுலகமே 15 பேர் கொண்டவர்களின் பிடியில் இருப்பதாக நடிகைகள் குற்றம்சாட்டினர்.
நடிகைகளை அரைக்குறை ஆடைகளில் தேவையின்றி நடிக்க வற்புறுத்துகிறார்கள். அது போல் ஒரு நடிகர், தன்னை கட்டிப் பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்கு 17 முறை ரீடேக்குகள் வாங்கியதாகவும் நடிகை குற்றம்சாட்டியிருந்தார். அது போல் சம ஊதியம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என நடிகைகள் குற்றம்சாட்டினர்.
உடை மாற்ற வேண்டும் என்றாலும் கூட எங்காவது மரத்தின் பின்புறம் நின்று மாற்றும் அவலம் இருப்பதாகவும், மாதவிடாய் சமயத்தில் நாப்கின் மாற்ற கூட முடியாமல் தவிப்பதாகவும் நடிகைகள் புகாரில் தெரிவித்திருந்தனர். அது போல் கழிப்பறை இல்லாததால் நடிகைகள் ஷூட்டிங்கில் தண்ணீர் குடிப்பதே இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
மொத்தம் 235 பக்கங்கள் கொண்ட ஒரு பகுதி அறிக்கையே வெளியாகியுள்ளது. சூட்டிங் செல்லும் போது நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்கவே பலர் தங்கள் பெற்றோர் அல்லது உறவினர்களை உடன் அழைத்து வருகிறார்கள் என்றும் நடிகைகள் சொன்னதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய பிரச்சினைகளாக அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சினிமா துறையில் நுழையவும் தொடர்ந்து வாய்ப்புகளை பெறவும் நடிகைகள் பாலியல் ரீதியில் ஒத்துழைப்பு (அட்ஜெஸ்ட்மென்ட்) தர வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாலியல் இச்சைக்கு இணங்க மறுக்கும் நடிகைகளை குறி வைத்து சித்தரவதை செய்யப்படுகிறது. அவர்களை வேறு மாதிரி சித்தரித்து வாய்ப்புகளே கிடைக்காதபடி செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன.
தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நடிகைகள் குரல் கொடுத்தால் அத்துடன் சினிமா துறையில் பணிபுரியவே முடியாத வகையில் தடை விதிக்கப்படுகிறது. மது அருந்துதல், போதை பொருள் பயன்பாடு உள்ளிட்ட ஒழுக்கமின்மை சினிமாவில் அதிகம் இருக்கிறது. ஒப்புக் கொண்ட ஊதியத்தை வழங்க மறுப்து, பெண்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு வந்து பாலியல் தொல்லை தருவது உள்ளிட்டவை நடப்பதாக புகாரில் நடிகைகள் கூறியிருந்தனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications