Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மலையாள நடிகையின் ஆபாச படம்.. மார்பிங் செய்து பதிவிட்ட 2 குமரி இளைஞர்கள்.. சுற்றி வளைத்த போலீஸ்

மலையாள நடிகையின் ஆபாச படத்தை பதிவிட்ட 2 பேர் கைதானார்கள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையின் மார்பிங் செய்த ஆபாச போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர் 2 பேர்.. அவர்கள் குமரியை சேர்ந்தவர்கள்..!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகை பிரவீணா.. இப்போது தமிழ் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவரது ஆபாச போட்டோக்கள் சில, இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியானது...

இதை பார்த்து நடிகை பிரவீணாவும், அவரது ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்... அந்த ஆபாச போட்டோக்களில் இருப்பது தொடர்புடைய நடிகையில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

எனினும் அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானதால், உடனடியாக கேரள ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாமிடம் புகார் அளித்தார் பிரவீணா. இந்த புகார் தொடர்பாக, திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பல்ராம் குமார் உபாத்யாயா தலைமையில் ஒரு தனிப்படைக்கு உத்தரவிட்டார்... இவர்கள் நடத்திய விசாரணையில், பிரவீணாவின் போட்டோ ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.. இதை பதிவிடுவதற்காகவே இன்ஸ்டாகிராமில் போலி ஐடி உருவாக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது..

 2 பேர் கைது

2 பேர் கைது

இதையடுத்து, அந்த ஐடி குறித்த தகவல்களை போலீசார் சேகரித்தனர்.. அப்போதுதான் மணிகண்டன், பாக்கியராஜ் என்ற 2 பேரும் சிக்கினர்.. 2 பேருமே குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.. இதில் மணிகண்டன் சங்கரை நாகர்கோயிலில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.. ஆனால், பாக்கியராஜ் அதற்குள் தலைமறைவானார்.. பாக்யராஜுக்கு 22 வயதாகிறது.. அவருக்கான தேடுதல் வேட்டை தீவிரமானதில், டெல்லி சாகர்பூர் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது..

 டெல்லி

டெல்லி

இதையடுத்து டெல்லி சென்ற கேரள தனிப்படை போலீசார், சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். 2 பேரையும் நேற்று திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்... அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.. இதனிடையே, இவர்களின் கைது குறித்து பாதிக்கப்பட்ட நடிகை பிரவீணா சொல்லும்போது, "என்னுடைய படங்களை மார்பிங் முறையில் ஆபாச படங்களாக மாற்றி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவர்களை கைது செய்ததால் மகிழ்ச்சி அடைகிறேன்...

 கோரிக்கை

கோரிக்கை

சினிமா துறையிலுள்ள பல்வேறு நடிகைகளுக்கு எதிராக இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.. ஆனால், பெரும்பாலானோர் போலீசில் புகார் செய்யாததால், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு ஊக்கமாக அமைந்துவிடுகிறது... அதனால், இனியாவது பாதிக்கப்பட்ட நடிகைகள் இதுதொடர்பாக புகார் அளிக்க முன்வரவேண்டும்.." என்று கேட்டுக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+