பாஜகவில் சேரும் சசிதரூர்? ராகுல் காந்தியின் செயலால் கடும் அதிருப்தி.. மேலிட மீட்டிங்கில் ‛எஸ்கேப்’
திருவனந்தபுரம்: கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூர் காங்கிரஸ் மேலிட கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தை போல் விரைவில் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவை எடுத்து கொண்டால் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் வாகை சூடியது. ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி மற்றும் பாஜக பின்தங்கியது.

இது காங்கிரஸ் கட்சியினருக்கு புத்துயிர் கொடுத்துள்ளது. இதனால் எப்படியாவது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சியினர் பணிகளை தொடங்கி உள்ளனர். கேரளா சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் இன்று மீட்டிங் நடைபெற உள்ளது.
இதனை சசிதரூர் எம்பி புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் அவர் இந்த மீட்டிங்கை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. அதாவது சமீபத்தில் கொச்சியில் நடந்த மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் சசிதரூர் பங்கேற்றார். ராகுல் காந்தி பங்கேற்ற இந்த கூட்டத்தில் அவருக்கு உரிய மரியாதை காங்கிரஸ் தலைவர்கள் வழங்கவில்லை.
புரோட்டோகால் அடிப்படையில் அவருக்கு இருக்கை வழங்கப்படவில்லை. அதோடு பேசும் நேரம் தொடர்பான விஷயத்தில் சர்ச்சை எழுந்தது. அதாவது ராகுல் காந்தி வந்த பிறகு சசிதரூர் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் பிற தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர். சசிதரூர் பின்னுக்கு தள்ளப்பட்டார். இதனால்அவர் அதிருப்தியடைந்தார்.
அதேபோல் ராகுல் காந்தியும் பிற தலைவர்களை சுட்டிக்காட்டி பேசிய நிலையில் சசிதரூரை புறக்கணித்தார். மேலும் அவர் தனது உழைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் டெல்லி மேலிட தலைவர்களிடம் மதிப்பு இல்லை. என்னை ஓரம்கட்டுகின்றனர் என்று அவர் தனது நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில் தான் கேரளா சட்டசபை தேர்தல் தொடர்பான மேலிட தலைவர்களின் கூட்டத்தை அவர் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சசிதரூரின் அதிருப்தி பற்றி இன்னும் காங்கிரஸ் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சசிதரூர் சமீபகாலமாக பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காண்பித்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை அடிக்கடி புகழ்ந்து பேசி வருகிறார். பாஜகவின் பிற தலைவர்களையும், அவர்களின் திட்டத்தையும் புகழ்ந்து பேசி வருகிறார். இதனால் சசிதரூர் விரைவில் பாஜகவில் ஐக்கியமாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications