பாரத் பந்த்! கேரள எல்லையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள்! போக்குவரத்து தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்பு
திருவனந்தபுரம்: இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. அந்த வகையில், கேரளாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் கேரள எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருக்கின்றன. இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.

கேரளாவில் வேலை நிறுத்த போராட்டம் காலை முதல் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர். எனவே தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
கேரளாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமல்லாது, தனியார் பேருந்து ஓட்டுநர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல மேற்கு வங்கத்திலும் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அங்கும் அரசு மற்றும் தனியார் பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications