56 துண்டுகளான ரோஸ்லின்.. 5 துண்டுகளான பத்மா.. குங்குமம் பூசப்பட்ட பை.. வெலவெலக்கும் கேரளா நரபலி
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் தமிழக பெண் உள்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் மீட்கப்பட்ட முதலாவது உடலானது 56 துண்டுகளாக கூறுபோடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியை சேர்ந்தவர் பத்மா. இவர் சில ஆண்டுகளாக கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கொச்சி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அது போல் கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் (50) என்பவரும் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்.

2 பேரின் செல்போன்
2 பேரின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கடைசியாக பத்தினம்திட்டா அருகே திருவல்லா என்ற இடத்தில் இருவரும் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில் இருவரும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த முகமது ஷபி என்பவர் கைது செய்யப்பட்டார்.

நரபலி
நரபலி கொடுக்கப்பட்ட பெண் பத்மா, எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரங்கன் (70) என்பவரின் மனைவியாவார். இருவரும் தோட்ட வேலைக்காக கேரளாவில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ரங்கன் சொந்த ஊருக்கு திரும்ப பத்மா மட்டும் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வந்திருந்தார்.

முகமது ஷபி
முகமது ஷபியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. முதலில் ரோஸ்லினின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் 56 துண்டுகளாக கூறுப்போடப்பட்டிருந்தது. அது போல் இரண்டாவது கிடைத்த பத்மாவின் உடல் 5 துண்டுகளாக கூறு போடப்பட்டிருந்தது.

குங்குமம்
உடல்கள் போடப்பட்ட பைகளில் குங்குமம் தடவி இருந்தது. ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இந்த நரபலிகள் கடந்த ஜூன் 8 மற்றும் செப்டம்பர் 26 ஆம் தேதிகளில் மாலை 5 முதல் 6 மணிக்குள் நடந்திருக்கிறது. பத்மாவையும் ரோஸ்லினையும் முகமது ஷபிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தெரியுமாம். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்படுகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications