Bumper Lottery: 20 கோடி விழுந்த லாட்டரி டிக்கெட்! ஐயப்ப பக்தருக்கு தெரியாமல் அனுப்பிட்டேன்! கேரள ஹைகோர்ட்டில் வழக்கு
திருவனந்தபுரம்: கேரளாவில் சமீபத்தில் நடந்த "கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி"க்கான (Kerala Christmas New Year Bumper Lottery) குலுக்கலில் முதல் பரிசு ரூ.20 கோடி XC 138455 என்ற எண்ணுக்கு அடித்தது. ரூ.20 கோடி பரிசுத் தொகை என்பதால் முதல் பரிசு அடித்த நபர் யார் என கேரள சேட்டன்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் கேரள உயர் நீதிமன்றம் முதல் பரிசுத் தொகை அடித்த நபருக்கு ரூ.20 கோடியை வழங்க தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது.
கேரளாவில் லாட்டரிகள் ரொம்பவே பிரபலமாக உள்ளன. அங்கு தினம் தோறும் ரூ.1 கோடி மதிப்பு கொண்ட டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் நடைபெறும். அதுபோக வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளுக்கான குலுக்கலும் நடைபெறுகிறது.

கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி
இதற்கு பல கோடிகளில் முதல் பரிசு கிடைக்கும் என்பதால், லாட்டரி பிரியர்கள் மத்தியில் இந்த பம்பர் டிக்கெட்டுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவும். தற்போது சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையாகி வரும் நிலையில், இதற்கு முன்பாக கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
இதற்கான முதல் பரிசு ரூ.20 கோடியாகும். 400 ரூபாய் விலை கொண்ட இந்த டிக்கெட்டை கேரள சேட்டன்கள் மட்டும் இன்றி கேரளாவிற்கு சென்ற வெளி மாநிலத்தவர்களும் ஆர்வத்துடன் வாங்கியதை பார்க்க முடிந்தது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. முதல் பரிசு XC 138455 என்ற எண்ணிற்கு அடித்த போதும் பரிசு விழுந்த நபர் யார் என்று தெரியவில்லை.
முதல் பரிசு ரூ.20 கோடி வழங்க தடை
இதனால், அந்த அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என்று கேரள சேட்டன்கள் பெரும் எதிர்பர்ப்புடன் இருந்த நிலையில், தற்போது கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் பரிசுத்தொகையை விடுவிக்க கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கேரளாவின் பிரவோம் பகுதியை சேர்ந்தவர் சஜிமோன். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான இவர் எர்ணாகுளம் தெற்கு ரயில்வே நிலையம் அருகே சபரிமலை பக்தர்களுக்காக மினிவேன்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நெய் பிரசாதம் அடங்கிய பை
அதில், முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை தவறுதலாக தொலைத்துவிட்டதால், அதற்கான பரிசுத்தொகையை விடுவிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளர். சஜிமோன் தனது மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தனது விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் தவறுதலாக நெய் பிரசாதம் அடங்கிய பையை எனது அலுவலகத்தில் விட்டு சென்றார்.
அந்த பிரசாதம் அடங்கிய பைகளை சேகரித்து, ஐயப்ப பக்தரிடம் தகவல் தெரிவித்தேன். அவரும் அதை கூரியர் செய்து விடுமாறு கூறினார். இதற்கிடையே, நான் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரியை வாங்கிவிட்டு, அதிர்ஷ்டம் அடிக்கட்டும் என்று அந்த நெய் பிரசாத பையில் போட்டு வைத்து இருந்தேன். லாட்டரி முடிவுகள் வெளியாகும் நாள் அன்று தவறுதலாக நான் மயங்கி விழுந்துவிட்டேன்.
டிக்கெட்டை ஊழியர் எடுத்துள்ளார்
சில நாட்களுக்கு முன்புதான் நான் முழு சுயநினைவை அடைந்தேன். அதன்பிறகு எதேச்சையாக டிக்கெட் இருந்த பையுடன் சேர்த்து விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஐயப்ப பக்தருக்கு கூரியர் அனுப்பி வைத்துவிட்டேன். பிறகுதான், அதில் லாட்டரி டிக்கெட் இருந்தது. முதல் பரிசு அடித்த அந்த லாட்டரி டிக்கெட் இருந்ததால் உடனடியாக கூரியை நிறுத்துமாறு கூரியர் நிறுவன அதிகாரிகளை கேட்டேன்.
ஆனால், லாட்டரி டிக்கெட்டுடன் அந்த யாத்ரிகருக்கு நெய் பிரசாதம் கூரியர் செய்யப்பட்டதாக அந்த ஊழியர் கூறினார். அந்த டிக்கெட்டை ஊழியர் எடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
தடை விதித்த உயர் நீதிமன்றம்
இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி குரியன் தாமஸ் அமர்வு, லாட்டரி டிக்கெட்டிற்கான பரிசுத்தொகையை மறு உத்தரவு வரும் வரை வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், கேரள லாட்டரி துரை சீலிட்ட கவரில் லாட்டரி டிக்கெட்டின் இரண்டு பக்கங்களையும் நகல் எடுத்து வைக்க வேண்டும். அதேபோல பரிசுத்தொகை உரிமை கோருபவரின் விவரங்களையும் அதில் இணைத்து வைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications