கண்டெய்னர்களுடன் கடலில் தடுமாறிய சரக்கு கப்பல்! கடல் சீற்றத்தால் கேரள கடல் பகுதியில் அசம்பாவிதம்
திருவனந்தபுரம்: கேரள கடல் பகுதியில் சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலில் நிலைத்தடுமாறி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்த 24 பேரில், 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
எம்எஸ்சி எல்எஸ்ஏ 3 என பெயரிடப்பட்ட லைபிரியா நாட்டை நேர்ந்த சரக்கு கப்பல் நேற்று விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் கப்பல் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது. கப்பலின் கேப்டன் எப்படியாவது கப்பலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தீவிரமாக முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. எனவே கப்பல் கடலில் மூழ்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து கேப்டன் இந்திய கடற்படைக்கு அவசர செய்தியை அனுப்பியுள்ளார்.
செய்தி கிடைத்தவுடன் இந்திய கடற்படை உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியது. இந்த கப்பல் ஏற்றி சென்ற கண்டெய்னரில் சில ஆபத்தான பொருட்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே, இவை கடலோர மக்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்திவிட கூடாது என்று கடற்படையும், கடலோர காவல்படையும் இணைந்து சில தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
விபத்து நடந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மொத்தமாக கப்பலில் 24 பேர் இருந்திருக்கின்றனர். இதில் 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். கப்பலின் கேப்டன், தலைமை பொறியாளர் மற்றும் இரண்டாம் நிலை பொறியாளர் ஆகியோரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த விபத்து குறித்து இந்திய கடலோர காவல்படை விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய கடலோர காவல்படையின் (ICG) கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்ந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கப்பல் சாய்ந்திருப்பதால் சில கண்டெய்னர்கள் கடலில் விழுந்திருக்கின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கப்பலின் நிலைத்தன்மையை பராமரிக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications