கண்டெய்னர்களுடன் கடலில் தடுமாறிய சரக்கு கப்பல்! கடல் சீற்றத்தால் கேரள கடல் பகுதியில் அசம்பாவிதம்
திருவனந்தபுரம்: கேரள கடல் பகுதியில் சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலில் நிலைத்தடுமாறி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்த 24 பேரில், 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
எம்எஸ்சி எல்எஸ்ஏ 3 என பெயரிடப்பட்ட லைபிரியா நாட்டை நேர்ந்த சரக்கு கப்பல் நேற்று விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் கப்பல் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது. கப்பலின் கேப்டன் எப்படியாவது கப்பலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தீவிரமாக முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. எனவே கப்பல் கடலில் மூழ்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து கேப்டன் இந்திய கடற்படைக்கு அவசர செய்தியை அனுப்பியுள்ளார்.
செய்தி கிடைத்தவுடன் இந்திய கடற்படை உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியது. இந்த கப்பல் ஏற்றி சென்ற கண்டெய்னரில் சில ஆபத்தான பொருட்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே, இவை கடலோர மக்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்திவிட கூடாது என்று கடற்படையும், கடலோர காவல்படையும் இணைந்து சில தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
விபத்து நடந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மொத்தமாக கப்பலில் 24 பேர் இருந்திருக்கின்றனர். இதில் 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். கப்பலின் கேப்டன், தலைமை பொறியாளர் மற்றும் இரண்டாம் நிலை பொறியாளர் ஆகியோரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த விபத்து குறித்து இந்திய கடலோர காவல்படை விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய கடலோர காவல்படையின் (ICG) கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்ந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கப்பல் சாய்ந்திருப்பதால் சில கண்டெய்னர்கள் கடலில் விழுந்திருக்கின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கப்பலின் நிலைத்தன்மையை பராமரிக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications