இந்தியாவில் முதல்முறை.. புதிய சாதனை படைத்த கேரளா.. கொரோனா போராட்டத்தில் முதல் வெற்றி இதுதான்!
திருவனந்தபுரம்: கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் கேரளா இன்று புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது.
Recommended Video
கொரோனாவிற்கு எதிரான போரில் கேரளா தீவிரமாக வென்று வருகிறது. கேரளாவில் இதுவரை 378 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இன்று 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இன்று மட்டும் 1118 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
அங்கு மொத்தமாக 15,683 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 14,829 பேருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 715 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.

கேரளாவில் எத்தனை பேர்
கேரளாவில் மொத்தம் 378 பேர் கொரோனா நோயோடு அனுமதிக்கப்பட்டனர். அங்கு நேற்று 36 பேர் குணப்படுத்தப்பட்டனர். இன்று 19 பேர் குணப்படுத்தப்பட்டனர். இத்தனை நாட்கள் குணப்படுத்தப்பட்ட எல்லோரையும் சேர்த்து இதுவரை கேரளாவில் மொத்தம் 198 பேர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவிலேயே கொரோனாவால் இவ்வளவு பேர் வேகமாக குணப்படுத்தப்பட்டது கேரளாவில் மட்டும்தான்.

கேரளாவில் எத்தனை பேர்
கேரளாவில் மொத்தம் 378 பேர் கொரோனா நோயோடு அனுமதிக்கப்பட்டனர். அங்கு நேற்று 36 பேர் குணப்படுத்தப்பட்டனர். இன்று 19 பேர் குணப்படுத்தப்பட்டனர். இத்தனை நாட்கள் குணப்படுத்தப்பட்ட எல்லோரையும் சேர்த்து இதுவரை கேரளாவில் மொத்தம் 198 பேர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவிலேயே கொரோனாவால் இவ்வளவு பேர் வேகமாக குணப்படுத்தப்பட்டது கேரளாவில் மட்டும்தான்.

செம சாதனை
அங்கு குணப்படுத்தப்பட்டவர்களின் சதவிகிதம் 50% தாண்டியுள்ளது. அதோடு தற்போது அங்கு கொரோனா இருக்கும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 178தான். அதாவது அங்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை விட குறைவான நோயாளிகள்தான் மருத்துவமனையில் இருக்கிறார்கள். இந்தியாவில் இப்படி ஒரு வெற்றியை பெற்று இருக்கும் ஒரே மாநிலம் கேரளாதான்.

முதல் வெற்றி
இதன் மூலம் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் கேரளா இன்று புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது. இது கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முதல் வெற்றியாகும். அங்கு தினமும் 10 பேருக்கும் அதிகமாக குணப்படுத்தப்படுகிறார்கள். கேரளாவின் இந்த வெற்றிக்கு அங்கு அதிகமான நபர்கள் டெஸ்ட் செய்யப்பட்டதுதான் காரணம் ஆகும்.

முழு வெற்றிக்கு வாய்ப்பு
விரைவான டெஸ்ட் மற்றும் முறையான கட்டுப்பாடு ஆகியவை மூலம் கேரளா கொரோனாவை 80% வென்றுவிட்டது. இந்த லாக் டவுன் முடிவில் பெரும்பாலும் கேரளாவில் நோயாளிகள் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லோரும் குணமடைந்து இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதில் கேரளாவில் காசர்கோடு மற்றும் கன்னூர்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. காசர்கோட்டில் 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் கண்ணூரில் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கேரளா விடுபடுகிறது
இந்த நிலையில் இன்றும் மட்டும் 6 பேர் காசர்கோட்டில் குணமடைந்து உள்ளனர். இன்று அங்கு யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை. இதன் மூலம் காசர்கோடு வேகமாக கொரோனாவில் இருந்து விடுபட்டு வருகிறது. கேரளாவில்தான் தற்போது மிக குறைவான இறப்பு சதவிகிதம் உள்ளது. அங்கு 1%க்கும் குறைவான மக்கள்தான் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications