தனக்கு மிஞ்சிதான் தானம்- இது பழமொழி.. தனக்கு ஒன்றுமில்லாவிட்டாலும் தானம்.. இது மேரியின் புதுமொழி
திருவனந்தபுரம்: ஊரடங்கால் சரி வர வேலைக்கு செல்ல முடியாத நிலையிலும் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களுடன் ரூ 100ஐ இணைந்து வழங்கி வருவது வைரலாகி வருகிறது.
கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந்த பகுதியில் உள்ள மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து தவித்து வந்தனர்.
மேலும் நிலச்சரிவால் பலர் வீடுகளை இழந்து பாதித்துள்ளார்கள். இவர்களுக்கு உதவி செய்ய எர்ணாகுளம் மாவட்டம் கும்பலங்கி கிராமத்தை சேர்ந்த மேரி செபாஸ்டியன் முன் வந்துள்ளார்.

ரூ 100-ஐ சேர்த்து
ஆம் தனது வீட்டில் தயாரிக்கும் உணவுப் பொட்டலங்களுடன் சேர்த்து பல பகுதிகளுக்குச் சென்று உணவு பொட்டலங்களையும் பெற்றுக் கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டு போய் கொடுக்கிறார். மேலும் யாருக்கும் தெரியாமல் உணவு பொட்டலத்துடன் ரூ 100-ஐ சேர்த்து செல்லோடேப் போட்டு சுற்றி பாதுகாப்பாகவும் கொடுக்கிறார்.

காவலர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் மேரி செபாஸ்டியன் கொடுத்த சாப்பாட்டு பொட்டலத்தை பிரித்து பார்த்துள்ளார். அதில் ரூ 100 இருந்ததை பார்த்து விட்டு நண்பர்களுக்கு போன் செய்து கேட்டுள்ளார். அவர்களும் தங்களது உணவு பொட்டலத்தில் ரூபாய் நோட்டு இருந்ததாக தெரிவித்தனர்.

மேரி செபாஸ்டியன்
அவர்களுக்கு உணவு வழங்கியது யார் என பார்த்த போது மேரி செபாஸ்டியன் என தெரியவந்தது. தற்போது அந்த பெண்ணை தேடி பிடித்து கேரளா மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இவரே ஒரு கூலித் தொழிலாளி, கொரோனா ஊரடங்கால் 15 நாட்கள் மட்டுமே இவர் வேலைக்கு சென்றுள்ளார். அதில் வந்த பணத்தை வைத்து அவர் உதவி செய்துள்ளார். தனக்கு இல்லாட்டியும் இல்லாதோருக்கு தானமாக கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் என்னால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்ய நினைத்தேன். நான் அவ்வப்போது டீ குடிப்பேன்.

குளிர்
அது போல் மழை, வெள்ளத்தால் பாதித்த மக்கள் குளிரை போக்க டீ குடிக்க நினைப்பர். ஆனால் அவர்களிடம் காசு இல்லை என்ற எண்ணம் வந்துவிடக் கூடாது என்பதற்காக நான் கொடுக்கும் காசு டீக்குடிக்கவாவது வைத்துக் கொள்ளவார்களே என்ற எண்ணத்தில்தான் கொடுக்கிறேன். இந்த ரூபாய் நோட்டை வைத்தது நான்தான் என தெரியக் கூடாது என நினைத்தேன். ஆனால் தெரிந்துவிட்டது என்றார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications