சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தவெக கொடியுடன் வந்த நபர்.. 18 ஆம் படி அருகே அதிரடி காட்டிய போலீசார்
திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தையொட்டி சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சபரிமலையில் பக்தர் செய்த ஒரு காரியம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, சபரிமலைக்கு சென்ற ஒருவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடியை உயர்த்திப் பிடித்தபடி 18 ஆம் படி வரை சென்றார். இதைக் கவனித்த போலீசார், கொடியை கொண்டு செல்லக்கூடாது என்று எச்சரித்தனர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

சபரிமலை மகரஜோதி
அந்த வகையில், இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. 27 ஆம் தேதி முடிவுபெற்றது. மகரவிளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது. பொன்னம்பலமேட்டியில் ஜோதியே வடிவாக காட்சிதரும் ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தவெக கொடியுடன் வந்த பக்தர்
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனிடையே, சபரிமலையில் நேற்று பக்தர் செய்த ஒரு காரியம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சபரிமலைக்கு சென்ற ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை உயர்த்திப்பிடித்தபடி 18 ஆம் படி வரை சென்றார்.
எச்சரித்து அனுப்பிய போலீசார்
இதைக் கவனித்த போலீசார், கொடியை கொண்டு செல்லக்கூடாது. கொடியை மடக்கிவைத்து செல்ல வேண்டும் என்று எச்சரித்தனர். இதையடுத்து, அந்த நபர் தவெக கொடியை மடக்கி வைத்து 18 ஆம் படி ஏறிச் சென்றார். தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க விஜய் ஆயத்தமாகி வரும் நிலையில், தவெகவினர் ஆர்வமிகுதியால் கட்டுப்பாடு உள்ள பகுதிகளிலும் கூட தவெக கொடியை காட்டுவது, தவெகவிற்கு ஆதரவாக கோயிலுக்குள் பிரசாரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள்ளும்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள், சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்களிடம் சில இளைஞர்கள் தவெகவிற்கு ஓட்டு போடுமாறு வலியுறுத்தியதும், முருகன் கோயிலுக்குள் தவெகவிற்கு அரோகரா.. விஜய்க்கு அரோகரா என கோஷம் இட்டது அங்கிருந்த பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செந்தூர் கோவில் நிர்வாகமும் காவல்துறையில் புகார் அளித்திருந்தது.
கோயில் வளாகத்தில் தடையை மீறிச் செல்போனில் வீடியோ எடுத்தது மட்டும் இன்றி ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக பக்தர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லும் போதும் தவெக கொடியை அக்கட்சி தொண்டர் ஒருவர் தூக்கிச் சென்றது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications