திடீரென கோயில் வளாகத்துக்குள் நுழைந்த "பபியா"... 70 வருடங்களுக்கு பிறகு கேரளாவில் பரபரப்பு
கோயிலுக்குள் திடீரென நுழைந்த முதலை பபியா
திருவனந்தபுரம்: அனந்த பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் 70 வருஷமாக வசித்துவரும் பபியா என்ற முதலை, முதன்முறையாக கோவில் வளாகத்துக்குள் நுழைந்ததாம்!
கேரள மாநிலம், காசர்கோட் மாவட்டத்தில் அனந்தபுரா என்ற கிராமம் அமைந்துள்ளது... இங்குதான் புகழ்பெற்ற அனந்த பத்மநாபசுவாமி கோவில் குளம் உள்ளது.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் போலவே அமைப்பு கொண்ட இக் கோயில் கேரளாவில் ஏரியின் நடுவில் இருக்கும் ஒரே கோயிலாகும். இந்த கோயில் குளத்தில் ஒரு முதலை 70 வருஷமாக வசித்து வருகிறது.. அந்த முதலையின் பெயர் பபியா.

இந்த கோயில் உருவான காலம் முதலே அந்த முதலைதான் பாதுகாத்து வருகிறதாம்.. ஒரு முதலை இறந்து விட்டால் இன்னொரு முதலை அந்த இடத்திற்கு வந்து விடும்.. அதனால் எப்போதுமே ஒரே ஒரு முதலைதான் இங்கு இருக்கும்.. ஒன்றுக்கும் மேற்பட்ட முதலைகளை இதுவரை யாருமே பார்த்ததில்லையாம்.
பபியா என்ற முதலை ரொம்ப சாதுவானது.. யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாது.. ஏரியில் உள்ள மீன்களை கூட சாப்பிடுவதில்லையாம்.. பூஜை செய்யப்பட்ட வெல்லம் கலந்த சாதத்தை மட்டுமே சாப்பிடுகிறது.. அந்த சாப்பாட்டுக்கு முசலி நெய்வேத்யம் என்று பெயர்.. அவல், வெல்லம், வாழைப்பழங்கள் கலந்த சாப்பாடுதான் தரப்படுகிறது என்று ஏற்கனவே செய்திகள் பல வந்துள்ளன. இப்போது பபியா பற்றி மற்றொரு செய்தி வந்துள்ளது.
முதன்முறையாக இந்த பபியா கோயில் வளாகத்துக்குள் நுழைந்துவிட்டதாம்.. 70 வருஷமாக யாருமே பார்த்திராத முதலை, திடீரென வந்ததாக அனந்த பத்மநாபசுவாமி கோவில் தலைமை பூசாரியான சந்திரபிரகாஷ் நம்பீசன் கூறியுள்ளார்.. கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துவிட்டு, திரும்பவும் குளத்துக்கே சென்றுவிட்டதாம்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications