கடவுள் தேசத்தில் ஒரு மர்ம தேசம்.. வயநாட்டில் பயங்கரம்.. பேய் பயம் இருக்கிறவங்க! இதை படிக்காதீங்க!
திருவனந்தபுரம்: கடவுள் தேசத்தில் ஒரு மர்ம தேசம் உள்ளதை நீங்கள் அறிவீர்களா? ஆம் வயநாட்டில் சங்கிலி மரம் என்ற ஒன்று இருக்கிறது, இதில் தான் அத்தனை மர்மங்கள் அடங்கியுள்ளன.
கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவை கடவுளின் தேசம் என அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட கடவுளின் தேசத்தில் ஒரு மர்ம தேசம் இருக்கிறது.
வயநாட்டில் லக்கிடி என்ற இடத்தில் தாமரச்சேரி காட் முடிச்சு எனும் இடத்தில் ஒரு சங்கிலி மரம் உள்ளது. கேரளாவில் உள்ள இந்த இடத்தை பற்றி நீங்கள் வேறு எங்கும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

சங்கிலி மரம்
இங்கு இருக்கும் சங்கிலி மரத்தில், மரம் வளர வளர சங்கிலியும் பெரிதாகி வருவதாக சொல்கிறார்கள். இதற்கான பகீர் பின்னணியை பார்ப்போம். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். இதை நாம் அறிவோம். அவ்வாறு ஆட்சி செய்யும் போது கள்ளிக்கோட்டையிலிருந்து (Calicut)வயநாடு செல்ல ஆங்கிலேய பொறியாளர் ஒருவர் குறுகிய நேரம் கொண்ட பாதையை தேடி வந்தார்.

கப்பலில் கள்ளிக்கோட்டை
அதாவது கப்பலில் கள்ளிக்கோட்டையை அடையும் வியாபாரிகள் மூலம் இந்தியாவுக்குள் வாணிபத்தை ஏற்படுத்த இந்த குறுகிய காலத்தில் வயநாட்டை அடைய வழி தேவைப்பட்டது. இதற்காக அந்த பொறியாளர், கரிந்தண்டன் எனும் பழங்குடியின தலைவரை அணுகினார். அவர்தான் தற்போது சங்கிலி மரம் இருக்கும் வழியை கண்டுபிடித்து கொடுத்தார்.

பழங்குடியினர்
அவர் வயநாட்டை சேர்ந்தவர். பழங்குடியினர் என்பதால் அவருக்கு அனைத்து சந்து பொந்துகளும் அத்துபடி!. இந்த நிலையில் வழியை கண்டுபிடித்ததற்கான நற்பெயரை கரிந்தண்டன் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அவர் அநியாயமாக வெள்ளைக்கார பொறியாளரால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மலை உச்சி
ஏதோ ஒரு மலை உச்சியில் கரிந்தண்டனை வைத்து துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து கரிந்தண்டன் கண்டுபிடித்து கொடுத்த வழியில் நிறைய பேர் உயிரிழந்தார்கள். இதனால் அப்பகுதி மக்கள் ஒரு பூசாரியை வரவழைத்து அவரிடம் விஷயத்தை சொன்னார்கள்.

பூசாரி
அப்போது அந்த பூசாரி அந்த மரத்தில் கரிந்தண்டனின் ஆவி இருப்பதாக கூறி அதை கட்டுப்படுத்த சங்கிலியை மரத்தை கட்டினார். அன்று முதல் மரம் வளர வளர சங்கிலியும் வளர்ந்து கொண்டே வருகிறது. பொதுவாக மரம் வளர வளர அதன் அடர்த்தியால் சங்கிலி தானாகவே துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் . ஆனால இங்கு சங்கிலியும் வளர்கிறது. லக்கிடியிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் இந்த சங்கிலி மரம் இருக்கிறது.

மரத்துடன் சங்கிலியும் வளர்கிறது
கரிந்தண்டன் நினைவாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று பழங்குடியின அமைப்பினர் பேரணியை நடத்துகிறார்கள். அந்த பேரணிக்கு கரிந்தண்டன் ஸ்மிரிதி யாத்ரா. மர்மங்கள் நிறைய அந்த சங்கிலி மரத்தை காண ஆவலாக இருக்கிறீர்களா? ஆமாவா, செம தில்லுதான் பாஸ் உங்களுக்கெல்லாம்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications