"விஸ்மயா".. 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், கார் தந்தும்.. வரதட்சணை கொடுமை.. கேரளாவை உலுக்கிய கொலை!?
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த விஸ்மயா வி நாயர் என்ற 24 வயது பெண் தனது கணவர் வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இந்த மரணம் குறித்து கேரள ஊடகங்களில் வெளியாகி இருக்கும் தகவல்கள் பல அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளன.
கேரளா கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்மயா. ஆயுர்வேத மருத்துவத்தில் இறுதி ஆண்டு படித்து வந்த விஸ்மயா, கொல்லம் உள்ள சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த எஸ் கிரண் குமார் என்ற நபரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2020 மார்ச்சில் இவர்களுக்கு இடையே திருமணம் நடந்தது. வீட்டில் சம்பந்தம் பேசி, குடும்பத்தார் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்தி உள்ளனர். இந்த திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 டொயோட்டா கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

வரதட்சணை
இந்த நிலையில் தொடக்கத்தில் விஸ்மயா - கிரண் தம்பதியினர் சந்தோஷமாகவே இருந்துள்ளனர். ஆனால் போக போக கிரண், விஸ்மயாவை அடிப்பதும் உதைப்பதுமாக கொடுமைப்படுத்தி உள்ளார். எனக்கு கொடுத்த காரை விற்றுவிடுங்கள். அதற்கு பதிலாக எனக்கு பணம் கொடுங்கள். 10 லட்சம் வேண்டும், 20 லட்சம் வேண்டும் என்று தினமும் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண் மோசமாக தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளார்.

24 வயது
வெறும் 24 வயதே நிரம்பிய விஸ்மயா தொடக்கத்தில் கொடுமைகளை சகித்துக் கொண்டு இருந்திருக்கிறார். ஆனால் போக போக கிரண் கொடூரமாக கட்டைகளை, ஆணிகளை வைத்து முகத்தில் தாக்கி கொடுமைபடுத்தி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் விஸ்மயா கிரண் இருவரும் விஸ்மயாவின் வீட்டிற்கு சென்ற போதும், பெற்றோர் முன்னிலையில், குடித்துவிட்டு விஸ்மயாவை கிரண் அடித்துள்ளார்.

மோசம்
இதையடுத்து அப்போதே போலீசில் புகார் அளிக்கப்பட்டு, கிரண் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பின் இரண்டு குடும்பமும் சுமுகமாக பேசி, சமரசம் செய்த பின் கிரண் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கணவனுடன் வாழ விருப்பம் இன்றி விஸ்மயா பிறந்த வீட்டிலேயே தங்கிவிட்டார். இந்த நிலையில்தான் இரண்டு மாதங்களுக்கு முன் விஸ்மயா தேர்வு எழுத கல்லூரி சென்ற போது, கிரண் நேராக கல்லூரிக்கு சென்று விஸ்மயாவை பிக் அப் செய்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

தாக்குதல்
முதல் ஒரு வாரம் அமைதியாக இருந்த கிரண் மீண்டும் குடித்துவிட்டு விஸ்மயாவை மோசமாக தாக்கி, அடித்துள்ளார். ஆனால் திருமண உறவு முறிய கூடாது என்ற அச்சத்தில் இதை அப்பா, தம்பியிடம் சொல்லாமல் விஸ்மயா அமைதியாக இருந்துவிட்டார். தனது சித்தப்பா மகனிடம் மட்டும் விஸ்மயா தனக்கு நடக்கும் கொடூரங்களை சொல்லி இருக்கிறார்.

முடியவில்லை
எண்டே மொகத்தில் சவட்டி.. ஒத்திரி அடிச்சு (என் முகத்தில் உதைக்கிறார்.. அதிகமாக அடிச்சிட்டார்) என்று சித்தப்பா மகனிடம் மெசேஜ் அனுப்பி விஸ்மயா வருந்தி இருக்கிறார். தன்னை மோசமாக தாக்கிய புகைப்படங்களையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விஸ்மயா வாட்ஸ் ஆப்பில் அனுப்பி உள்ளார். இந்த நிலையில்தான் நேற்று அதிகாலை விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் இறந்து கிடந்தார்.

போலீஸ்
இவர் எப்படி பலியானார் என்று தெரியாத நிலையில் விஸ்மயாவின் அப்பா திரிவிக்ரமன் போலீசில் புகார் அளித்துள்ளார். விஸ்மயாவை கிரண்தான் கொடுமைப்படுத்தி கொன்றதாக போலீசில் புகார் அளித்துள்ளார். உடலில் மோசமான காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பதால் கண்டிப்பாக இது கொலைதான் என்று போலீசும் சந்தேகிக்கிறது.

கொடுமை வழக்கு
அதோடு இதை வரதட்சணை கொடுமை கொலையாக பதிவு செய்து உள்ளனர். இன்று விஸ்மயாவின் பிரேத பரிசோதனை வர உள்ள நிலையில் கிரண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பிரேத பரிசோதனை முடிவு வந்த பின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்படும். விஸ்மயா என்ற பெண்ணின் மரணமும், அவர் அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ்களும் மொத்தமாக கேரளாவை உலுக்கி உள்ளது. கிரண் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் கொதிப்பாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications