Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அய்யோ! என்னது இது.! கார் ரயில்வே தண்டவாளத்தில போகுது.. தலைக்கேறிய போதையால் கேரளாவில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் மது போதையில் காரை ஓட்டி வந்த ஒரு போதை ஆசாமி, குறுக்கு சாலை என ரயில்வே டிராக்கில் காரை ஓட்டிச்சென்ற ஒரு காமெடி நடந்துள்ளது. இது குறித்த வீடியோ இணையதளத்தில் அதிகம் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மதுபோதையில் சிலர் தலைகால் புரியாமல் நடந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்யும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பார்த்து இருப்போம். சில நேரங்களில் நடு ரோட்டில் ரகளை செய்வது.. வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்வது... பாகுபலியாக தங்களை நினைத்துக் கொண்டு ஓடும் பேருந்தை குறுக்கே புகுந்து நிறுத்துவதாக பில்டப் செய்வது என சினிமா காமெடி காட்சிகளை விஞ்சும் அளவுக்கு மதுப்பிரியர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் சில நேரங்களில் போகிறது.

 Drunked driver arrested for driving a Car on railway track in Kerala

ஆனால், இதற்கெல்லாம் ஒரு படி மேலே என்று சொல்லும் அளவுக்கு மதுபோதையில் ரயில்வே டிராக்கில் காரை போதை ஆசாமி ஓட்டிச்சென்ற வினோதம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தேலே செவ்வா என்ற இடத்தில் இரவு நேரத்தில் கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. சாலையின் குறுக்கே ரயில்வே டிராக் ஒன்றும் இருந்ததால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்று கொண்டிருந்தனர்.

தண்டவாளத்தில் சென்ற கார்: ரயில்வே டிராக்கை கடந்து பல கார்களும் சென்று கொண்டிருந்த போது ஒரே ஒரு கார் மட்டும் திடீரென ரயில்வே டிராக்கை நோக்கி சென்றது. டிராக்கில் தொடர்ந்து 15 மீட்டர் வரை சென்று கார் ஆஃப் ஆகி நின்றது. ரயில்வே டிராக்கில் கார் போவதை பார்த்த அங்கிருந்த கேட் கீப்பர் காரின் பின்னாடியே ஓடினார். சில நிமிடங்களில் அப்பகுதி மக்களும் ரயில்வே டிராக்கில் கார் நிற்பதை வினோதமாக பார்த்தபடி அங்கு கூடினர்.

சாலை என நினைத்து: காரின் டிரைவரை பார்த்த போது மது போதையில் நிலை தடுமாறிக் கொண்டு இருந்தார். இது என்னடா வம்பா போச்சு... என்று தலையில் அடித்துக் கொண்ட ரயில்வே கேட் கீப்பர் நேராக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும் விரைந்து வந்து போதையில் காரை தாறுமாறாக ஓட்டி சென்றவரை கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "மதுபோதையில் காரை ரயில்வே தண்டவாளத்தில் ஓட்டியவர் கண்ணூர் மாவட்டம் அன்சரகண்டி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷம் என்பவர் ஆவர். சாலை என்று நினைத்து தண்டவாளத்தில் காரை ஓட்டியிருக்கலாம் என்று தெரிகிறது. தற்போது ஜெயபிரகாஷம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது காரை பறிமுதல் செய்து இருக்கிறோம்" என்றனர்.

 Drunked driver arrested for driving a Car on railway track in Kerala

கலாய்க்கும் நெட்டிசன்கள்: கடந்த 18 ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ரயில்வே டிரக்கில் கார் நிற்கும் காட்சிகளை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில ஜாலியாக கலாய்த்து பதிவிட்டு வருகிறார்கள்.

சில நெட்டிசன்களோ மதுபோதையில் இப்படி காரை ஓட்டும் நபர்களால் தான் பாதிக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடப்பதாகவும் அப்பாவி பொதுமக்களின் விலை மதிக்க முடியாத உயிர்களும் போகின்றன. எனவே இது போன்று மது போதையில் காரை ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+