தாண்டவமாடும் கொரோனா.. இழுத்துப் பூட்ட ரெடியாகும் கேரளா.. முழு ஊரடங்கு அமல்படுத்த முதல்வர் சூசகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத உச்சம் பெற்று உள்ளதால், அங்கு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தினமும் மாலையில் கேரள மாநிலத்தின் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விவரங்களை செய்தியாளர்களுக்கு தெரிவிப்பது முதல்வர் பினராயி விஜயன் வழக்கம்.
புதன்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இந்த தகவலை தெரிவித்தார்.

கேரளாவில் அதிகம்
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,038 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அந்த மாநிலத்தில் இதுவரை, இத்தனை பாதிப்புகள் ஒரே நாளில் பதிவானது கிடையாது. இதில் 226 கேஸ்கள் தலைநகர் திருவனந்தபுரத்தில் பதிவாகியுள்ளன. செயல்பாட்டில் உள்ள கேஸ்கள் எண்ணிக்கை 8,818.

நோயாளிகள் நிலை
ஒரே நாளில் பதிவானதில், 785 கேஸ்கள் உள்ளூர் மக்களின் போக்குவரத்து காரணமாக ஏற்பட்டவை. தற்போது கேரளாவில், 53 பேர் ஐசியு சிகிச்சையில் உள்ளனர். அதில் 9 பேர் வெண்டிலேட்டர் சிகிச்சை பிரிவில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 24 பேர் சுகாதார பணியுடன் தொடர்புடையவர்கள்.

கண்டறிதல்
57 பேருக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. 51 புதிய இடங்கள் ஹாட்ஸ்பாட் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன கேரளாவில் மொத்த ஹாட்ஸ்பாட் எண்ணிக்கை 397. இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

முழு ஊரடங்கு
அப்போது லாக்டவுன் நடைமுறைக்கு வருமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பதிலளித்த அவர், நாங்கள் ஏற்கனவே மாநிலம் முழுக்க முழுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியிருந்தோம். இப்போதும் அது போன்ற சூழ்நிலை பற்றி யோசித்து வருகிறோம். இருப்பினும் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. அதுபற்றி முடிவெடுக்க வேண்டிய தேவை இருப்பதாக நினைக்கிறேன். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications