Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவின் சுரேஷ் கோபி முதன் முறையாக வென்ற திருச்சூர் தொகுதியில் வாக்கு திருட்டு? வலுக்கும் புகார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநிலத்தில் திருச்சூர் தொகுதியில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முதல் முறையாக வெற்றி பெற்றிருந்தது. பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி பெற்றிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த தொகுதியில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

கடந்த 2019 முதல் 2024 வரை திருச்சூர் தொகுதியில் புதியதாக 1.46 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். எர்ணாகுளத்தில் 78,713 வாக்காளர்கள் மற்றும் திருவனந்தபுரத்தில் 63,008 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த புள்ளிவிவரங்கள் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் காட்டுகின்றன என இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) பாஜக மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

Thrissur ghost Kerala

காலியான வீடுகளின் முகவரிகளை பயன்படுத்தி வெளிநாட்டினரை போலி வாக்காளர்களாக பதிவு செய்திருப்பதாகவும், இப்படியாக வாக்களர்கள் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்திருக்கிறது எனவும் எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் குற்றம் சாட்டியுள்ளன. திரிசூர் வடக்கு காங்கிரஸ் மண்டலத் தலைவர் ஆஷிஷ் மூத்தெடத் இது குறித்து கூறுகையில், "இதைச் சரியாகத் திட்டமிட்டுச் செயல்படுத்த ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் ஆகியிருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

துணை வாக்காளர் பட்டியலில் முறைகேடாகச் சேர்க்கை நடந்தது என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் விமர்சித்துள்ளனர். துணைப் பட்டியல் என்பது திருத்தப்பட்ட பதிவேடு ஆகும், இதில் சேர்த்தல், நீக்குதல், மாற்றங்கள் அடங்கும். "கேரளாவின் பல்வேறு தொகுதிகளிலிருந்து பல தனிநபர்களைப் பாஜக திரிசூரில் வாக்காளர்களாகச் சேர்த்தது. இந்த சட்டவிரோதச் சேர்க்கையை நாங்கள் கவனித்து, இந்திய தேர்தல் ஆணையத்திடம் இரண்டு புகார்களை அளித்தோம், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை" என்று அவர்கள் கூறியுள்ளனர். இடதுசாரிகள் கூட்டணி கடந்த ஆண்டு மார்ச் 25 அன்று மாவட்ட ஆட்சியர் வி.ஆர். கிருஷ்ணா தேஜா ஐ.ஏ.எஸ்.யிடம் புகார் அளித்தது.

தேர்தல் முடிவுகளில் புதிய வாக்காளர் சேர்க்கையின் தாக்கம்

திரிசூர் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன, அவற்றில் ஆறு தொகுதிகளில் சுரேஷ் கோபி முன்னிலைப் பெற்றார். மணலூரில் 8,013 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்; ஒல்லூரில் (10,363), திரிசூரில் (14,117) முன்னிலை பெற்றார்; நாட்டிகாவில் (13,945) அதிக வாக்குகள் பெற்றார்; இரிஞ்சாலக்குடாவில் (13,016) மற்றும் புதுக்காட்டில் (12,692) முன்னிலை வகித்தார். இந்த எண்ணிக்கைகள் அவரது வெற்றியில் முக்கிய பங்காற்றின.

புகார்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை. எல்டிஎஃப் மற்றும் காங்கிரஸ் வெளிப்படையான விசாரணை கோருகின்றன. ஆனால் மாவட்ட ஆட்சியர் தரப்பில், "வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் அவர்கள் வாக்களிப்பதை தடுக்க முடியாது" என்று கூறியிருந்தார்.

கேரள அரசியல் மற்றும் தேர்தல் முறைகேடு

சுரேஷ் கோபி இதுவரை குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்கவில்லை. பாஜக தலைவர் கே. சுரேந்திரன் தங்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+