கேரளா நிகழ்ச்சியில் ஹமாஸ் தலைவர்.. பாஜக சொன்ன அந்த வார்த்தை.. பினராயி விஜயன் போட்ட உத்தரவு
திருவனந்தபுரம்: கேரளாவில் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஹமாஸ் தாக்குதலை கண்டித்து இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளையில் சுதந்திர பாலஸ்தீன நாடு அமைவது தான் இந்தியாவின் விருப்பம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது காசா நகரில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 27 ம் தேதி கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான காலித் மஷால் காணொளி காட்சி மூலம் பேசியது விவாதத்தை கிளப்பியத. கேரளாவின் மலப்புரத்தில் ஜமாத் இ இஸ்லாமியின் இளைஞர் பிரிவுகளில் ஒன்றாக கருதப்படும் சாலிடாரிட்டி இளைஞர் இயக்கம் சார்பில் நடந்த பேரணியில் அவர் காணொளியில் தோன்றி பேசியுள்ளார்.
அப்போது அவர், ‛‛நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து சியோனிஸ்டுகளை தோற்கடிக்க வேண்டும். அல் அக்ஸாவுக்காக போராடும் காசாவுக்காக ஒன்றிணைய வேண்டும்'' என பல விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது. இதனை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் உள்பட பாஜகவை சேர்ந்த பல தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதோடு நேற்று கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், ஹமாஸ் அமைப்பின் தலைவர் பேச்சு உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பினராயி விஜயன் அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தான் ஹமாஸ் தீவிரவாத தலைவர் பேசிய விவகாரம் குறித்து இன்று கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்ததாவது: ‛‛பாலஸ்தீன தலைவர் என்று குறிப்பிடப்படும் நபர் ஜமாத்-இ-இஸ்லாமியின் இளைஞர் பிரிவான சாலிடாரிட்டி யூத் இயக்கம் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவர் என்ன சொன்னார் என்பதை நாம் பார்க்க வேண்டும். வெளியான வீடியோ என்பது ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக்கூறினார். இதன்மூலம் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications