Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி சீனா, துபாய்க்கு போக வேண்டாம்! கேரளாவில் 3500 அடி உயரத்தில் நீளமான கண்ணாடி பாலம்! செம த்ரில்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவின் மிக நீளமான பாலம் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டம் பிக்சர்ஸ்க் மலை பிரதேசத்தில் நீளமான கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான பாலம் ஆகும். கோலாஹலமேடு பகுதியில் உள்ள இந்த கண்ணாடி பாலம் வழியாக இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.

Indias longest glass bridge open for public in Idukki

மிக தூரத்தில் உள்ள முண்டக்காகயம், குட்டிக்கல் மற்றும் கோக்காயார் ஆகிய தொலை தூர பகுதிகளை கூட இந்த கண்ணாடி பாலத்திலிருந்து ரசிக்கலாம். இந்த பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

முதல் நாள் என்றாலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இந்த பாலத்தை சுற்றுலா துறை அமைச்சர் முகமது ரியாஸ் திறந்து வைத்தார். இவருடன் எம்எல்ஏக்கள் வாழூர் சோமன், எம்.எம். மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னவென தெரியுமா?

இது 40 மீட்டர் நீளமுடையது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ 3 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 15 பார்வையாளர்கள் இந்த பாலத்தில் நின்று இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்,

வயது வித்தியாசமின்றி குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒருவருக்கு ரூ 500 கட்டணமாக வசூலிக்கப்டுகிறது. இந்த பாலத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே செலவிடலாம். இந்த பாலத்தில் பெரியவர்களும் சிறியவர்களும் திரில்லிங்கான அனுபவத்தை பெறலாம். இதற்கு சாகச பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு பெயர் கண்டீலீவர் கண்ணாடி பாலம். 120 அடி நீளம் கொண்டது இந்த பாலம்.

கண்ணாடி பாலம் கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் இருக்கிறது. இதனால் இங்கு கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படுகிறது. பாலத்தின் மேல் 15 அல்லது 20 பேரைத்தான் அனுமதிக்கிறார்கள். மற்ற விளையாட்டு நிகழ்வுகளான ஸ்கை விங், ஸ்கை சைக்கிளிங், ஸ்கை ரோலர், ராக்கர் எஜெக்டர், ஃப்ரீ பால், ஜியாண்ட் ஸ்விங் மற்றும் ஜிப் லைன் ஆகிய விளையாட்டுகளும் உள்ளன.

கண்ணாடி மேல் நடப்பதும் கண்ணாடியின் முனைக்கு சென்று 3500 அடி ஆழ பள்ளத்தை பார்ப்பதும் திகிலூட்டும் சம்பவம் இருக்கிறது. பயம் ஒரு பக்கம் இருந்தாலும் இங்கு வந்தால் நிச்சயம் மறக்க முடியாத திகில் அனுபவத்தை பெறலாம். 35 டன் ஸ்டீல், ஜெர்மனி கண்ணாடி கொண்டு பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சாகச பாலங்களை பார்வையிட இனி துபாய் அல்லது சீனாவுக்கு போக தேவையில்லை. கேரளாவின் இடுக்கிக்கு போங்க!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+